மேலும் அறிய

Crime : செஞ்சி அருகே திருமணமான 6 நாளில் புதுமணப்பெண் தற்கொலை.. மனமுடைந்த கணவரும் தற்கொலை

விழுப்புரம் செஞ்சி அருகே திருமணம் முடிந்து  அம்மா வீட்டிற்கு விருந்துக்காக சென்ற புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த கணவனும் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்த குந்தலம்பட்டு கிராமத்தைச் சார்ந்த சின்னசாமி - கன்னியம்மாள் இவர்களின் மகனான கட்டட மேஸ்திரி முருகன் (30) என்பவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சார்ந்த சின்னதுரை - மஞ்சுளா இவர்களின் மகள் சந்தியா (23) என்பவருக்கு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு குந்தலம்பட்டு கிராமத்தில் முருகன் வீட்டுக்கு வந்த சந்தியா மற்றும் முருகன் கடந்த 12-ஆம் தேதி சந்தியாவின் அம்மா வீட்டிற்கு  விருந்துக்காக கணவருடன் சென்றுள்ளனர். நேற்று நடைபெறுவதாக இருந்த விருந்திற்கு முருகனின் அம்மா மற்றும் அப்பாவும் வந்திருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சந்தியா வீட்டின் அருகே குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தபொழுது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக வீட்டிலிருந்த உறவினர்கள் சந்தியாவை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சந்தியாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உறவினர்களிடம்  தெரிவித்துள்ளார். சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சந்தியாவின் தந்தை சின்னதுரை கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு சந்தியாவின் கணவர் முருகன் தான் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி மாமனார் வீட்டில் இருந்து சென்ற நிலையில் விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு கிராமத்தில் அவர் வீட்டு அருகே உள்ள வயல்வெளி பம்பு செட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆகி 6 நாட்கள் ஆன நிலையில் மனைவி இறந்த மன உளைச்சலில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இரு தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக அவலூர்பேட்டை போலீசாரும், கீழ்பெண்ணாத்தூர் போலீசாரம் தனித்தனி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சந்தியாவிற்கு செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான ஏழுமலை என்பவருடன் காதல் இருந்துள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம் சோமஸ்பாடி பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் ஒரு மாதத்திலேயே சந்தியா வாழாமல் வந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இதனிடைய அவலூர்பேட்டை அடுத்த குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஆன முருகன் என்பவருடன் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முருகன் இல்லத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், சந்தியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில் அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தலால் சந்தியா திருமணத்துக்கு சம்மதித்தாகவும் தெரியவந்தது.

மேலும் சந்தியா தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து அவருடன் தொடர்பில் இருந்த ஏழுமலை என்பவரும் லாரியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணமான ஒரு வாரத்திலேயே புதுமண தம்பதிகளான கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
DMK Statement: “எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
“எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
DMK Statement: “எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
“எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
TN Weather Update: ஜூலை 28 வரை வெளுக்கப்போகும் கனமழை; எந்தெந்த மாவட்டங்கள்ல தெரியுமா.?
ஜூலை 28 வரை வெளுக்கப்போகும் கனமழை; எந்தெந்த மாவட்டங்கள்ல தெரியுமா.?
Trump Vs Iran: தேவைப்பட்டா மறுபடியும் தயாரிப்போம் - ஈரான்; தேவைப்பட்டா மறுபடியும் அடிப்போம் - ட்ரம்ப்
தேவைப்பட்டா மறுபடியும் தயாரிப்போம் - ஈரான்; தேவைப்பட்டா மறுபடியும் அடிப்போம் - ட்ரம்ப்
Aadhav Arjuna :  ‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா புது உருட்டு..!
‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா உருட்டு..!
Guest Lecturer: அரசு கலை, அறிவியல் கல்லூரி; 574 கவுரவ விரிவுரையாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தகுதி, வழிமுறை இதோ!
Guest Lecturer: அரசு கலை, அறிவியல் கல்லூரி; 574 கவுரவ விரிவுரையாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தகுதி, வழிமுறை இதோ!
Embed widget