மேலும் அறிய

மனைவியை கொலை செய்த பேராசிரியரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைப்பு!

போலீஸ் வந்தவுடன் தான் தந்தை தான் மனைவியைக் கொன்றுவிட்டார் என்றார். எனது மனைவியிடம் எனது தந்தை தவறாக நடக்க முற்பட்டார். அப்போது, என் மனைவி தடுத்ததால் கொலை நடந்துவிட்டது என்று கட்டுக்கதை கட்டினார்.

மனைவியை கொலை செய்த பேராசிரியரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கண்ணன். வயது 50. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

குற்றம் நடந்தது என்ன?

கண்ணன் ஒரு கல்லூரியில் நிர்வாக மேலாண்மை துறையில் பேராசிரியராக இருந்தார். அவருக்கு மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் (2012ல் 13 வயது) இருந்தனர். கண்ணன் அடிக்கடி அவரது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 16 2012ல் சம்பவ தினத்தன்று ராஜகோபாலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது கண்ணன் ஆத்திரத்தில், மனைவியின் தலையில் குழவியைப் போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், மனைவியின் கழுத்தையும் அறுத்துள்ளார். இது அனைத்தும் நடக்கும் போது அவர்களின் குழந்தை வேறு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவியைக் கொலை செய்த பின்னர் கண்ணன் தனது தந்தை ராஜகோபாலுக்கு ஃபோன் செய்து தகவல் கூறியுள்ளார். பதறிப்போன ராஜகோபால் போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டு அண்ணாநகரில் உள்ள வீட்டருகே இருப்பவர்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டு விரைந்துவந்தார்.

ஆனால், போலீஸார் வந்தவுடன் ராஜகோபால் தான் தனது மனைவியைக் கொன்றுவிட்டார் என்றார். எனது மனைவியிடம் எனது தந்தை தவறாக நடக்க முற்பட்டார். அப்போது, என் மனைவி தடுத்ததால் கொலை நடந்துவிட்டது என்று கட்டுக்கதை கட்டினார். ஆனால், சாட்சியங்கள் கண்ணன் மீதான குற்றச்சாட்டை தெளிவாக நிரூபித்தது. இதனால் கண்ணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


மனைவியை கொலை செய்த பேராசிரியரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைப்பு!

இந்நிலையில் கண்ணன் மரண தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கண்ணனின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உத்தரவிட்டனர். 

நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையின் போது கூறியதாவது:

கண்ணன் எப்போதுமே குற்றச் செயல் புரிபவராக இருந்ததில்லை. அவரால் சமூகத்துக்கு நிச்சயமாக இடையூறு இருக்காது. கண்ணன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்காக வருந்துகிறார். அவர் திருந்தி வாழவே விரும்புகிறார். இதை அரிதினும் அரிதான குற்றமாகக் கருதமுடியாது. அவருக்கு மரண தண்டனை தேவையில்லை. அவர் திருந்த வாய்ப்பளித்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால் கண்ணன் ஆயுள் தண்டனையுடன் விடுதலையாகும் சூழல் உருவாகிறது. 2012ல் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
விழுப்புரம் அருகே நள்ளிரவில் கொடூரம்: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரவுடி
விழுப்புரம் அருகே நள்ளிரவில் கொடூரம்: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரவுடி
என்னங்க இப்படி ஓடுது? அரசு பேருந்து LED திரையில் வந்த விசித்திர வாசகம்! வீடியோ வைரல்..!
என்னங்க இப்படி ஓடுது? அரசு பேருந்து LED திரையில் வந்த விசித்திர வாசகம்! வீடியோ வைரல்..!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget