மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime : விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்.. சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடிய தொழிலதிபர்.. என்ன நடந்தது?
பூவிருந்தவல்லியில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடியவர் கள்ளக்காதலியுடன் கைது
![Crime : விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்.. சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடிய தொழிலதிபர்.. என்ன நடந்தது? Chennai How a married man along with his girlfriend stole 550 pieces of jewelery from their own home Crime : விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்.. சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடிய தொழிலதிபர்.. என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/10/c518356d203eb41428f7b8fe34defa3d1660097988432109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேகர் --ஸ்வாதி
சென்னை பூவிருந்தவல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (40), தொழிலதிபர். இவரது தம்பி ராஜேஷ் (37). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து அவரது பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது மாயமாகியிருந்தது.
![Crime : விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்.. சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடிய தொழிலதிபர்.. என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/10/c9c81a8e772cc538cdaa3e34a2482cf11660097860836109_original.jpg)
இதையடுத்து ராஜேஸின் மனைவி நகை, தமிழ்ச்செல்வியின் நகை 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . போலீசாரின் விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது ஆசை நாயகிக்கு கொடுத்திருப்பது தெரியவந்தது.
![Crime : விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்.. சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடிய தொழிலதிபர்.. என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/10/05ec6408537e2eb4104e91dd84a8298e1660097888942109_original.jpg)
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதோடு வெளியூர் வரை சென்று சுற்றியுள்ளனர். மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்ற சேகர் அவரது ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 30 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.
![Crime : விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்.. சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடிய தொழிலதிபர்.. என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/10/b3884416821e58d1bb4ce064bff332aa1660097914065109_original.jpg)
அதேபோல், ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடிய சேகர் தோழியிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சேகர் மற்றும் ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
![Crime : விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்.. சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடிய தொழிலதிபர்.. என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/10/de36080b5685004566e4ea1c2615c65d1660097941590109_original.jpg)
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சுவாதிக்கு ஏற்கனவே , திருமணம் ஆகியதை மறைத்து சேகரை காதலித்து வருவதை போல் நடித்து வந்துள்ளார். சேகரிடம் பணம் மட்டும் நகைகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். சேகரும் பெண் மீது இருந்த காதல் மயக்கத்தால் பணம் மட்டும் நகையை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர். சுவாதியுடன் சேகர் சேர்ந்து கொண்டு அடிக்கடி கோவா, ஊட்டி ,கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சுவாதி இடம் சேகர் 200 சவரன் நகைகளை வீட்டிற்கு தெரியாமல் கொடுத்துள்ளார். இதனை அடைந்த சேகரின் தாய் ஸ்வாதிவியிடம் சண்டையிட்டு மீண்டும் அந்த நகைகளை மீட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மீண்டும் இப்படி ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது என விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion