மேலும் அறிய

பெண் பயணியை பேருந்தில் இருந்து கீழே தள்ளவிட்ட டிரைவர்..! சாலைமறியலில் ஈடுபட்ட பயணிகள்...! நடந்தது என்ன?

சென்னை, பெரும்பாக்கத்தில் பேருந்தில் இருந்து பெண் பயணியை அரசுப்பேருந்து ஓட்டுநர் கீழே தள்ளிவிட்டதில் பயணிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சென்னையின் மக்கள் பெரும்பாலும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு பேருந்துகளையே நம்பியுள்ளனர். மக்களின் தேவைகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் ஒவ்வொரு பகுதியிலும் இயக்கப்படுகிறது.  சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் இருந்து அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை நகரத்திற்கும் இடையே தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி முருமா. இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை பாரிமுனை செல்வதற்காக பெரும்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். பெரும்பாக்கத்தில் இருந்து பாரிமுனைக்கு முதல் பேருந்து 5.10 மணிக்கு புறப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், மணி 5.30 மணி ஆகியும் பேருந்து இயக்கப்படாமலே இருந்தது.


பெண் பயணியை பேருந்தில் இருந்து கீழே தள்ளவிட்ட டிரைவர்..! சாலைமறியலில் ஈடுபட்ட பயணிகள்...! நடந்தது என்ன?

இதனால், தம்பதிகளான செந்திலும், முருமாவும் பேருந்தின் ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கணவன்- மனைவி இருவரையும் மீண்டும் ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து, பேருந்தின் ஓட்டுநருக்கும், செந்தில் –முருமா தம்பதியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க : திமுக வட்டச் செயலாளர் கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் கைது: குற்றவாளியை நெருங்கும் தனிப்படை!

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் கண்ணன் செந்திலின் மனைவி முருமா பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்த முருமா மயக்கம் அடைந்தார். இதைக்கண்டு அங்கிருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர், பேருந்து ஓட்டுநரின் செயலை கண்டித்து பேருந்து நிலையத்தின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


பெண் பயணியை பேருந்தில் இருந்து கீழே தள்ளவிட்ட டிரைவர்..! சாலைமறியலில் ஈடுபட்ட பயணிகள்...! நடந்தது என்ன?

இதையடுத்து, கண்ணகி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்வின்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர். ஓட்டுநர் கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Vs Stalin: அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
TN Weather Update: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களே அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களே அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
Embed widget