மேலும் அறிய

பழகிய புகைப்படங்களை வெளியிடுவேன்... சென்னையில் இளம் பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது

மதுரவாயல் பகுதியில் பழகியபோது எடுத்த புகைப்படங்களை வைத்து பெண்ணை மிரட்டிய நபர் கைது.

புகைப்படங்களை வைத்து மிரட்டல்

சென்னை மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 27 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக ஜாகீர் உசேன் என்பவருடன் பழகி வந்த நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண் , ஜாகீர் உசேனை விட்டு விலகிச் சென்றுள்ளார். பின்பு அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதை தெரிந்து கொண்ட ஜாகீர் உசேன் , தான் பழகிய போது எடுத்த புகைப்படங்களை வைத்து திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

வன்கொடுமை தடுப்பு சட்டம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 27 வயது பெண் , T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிறையில் அடைப்பு

T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் ( வயது 32 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேன் , விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது.100 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அவர்களின் உத்தரவின்பேரில், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப் படையினர் தொடர்ந்து கண்காணித்து , போதைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக , P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கொடுங்கையூர் காமராஜர் சாலையில் கண்காணித்து அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

பெங்களூரிலிருந்து வாங்கி வந்து விற்பனை

சந்தேகம் அதிகரிக்கவே அவர்களை சோதனை செய்த போது , உடல்வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில், P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த நபர்கள் 1.மகேஷ் ( வயது 36 )  2.சுமன் ( வயது 38 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 Tapentadol மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  மாத்திரைகளை பெங்களூருவிலிருந்து வாங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் மகேஷ் மீது ஏற்கனவே 9 குற்ற வழக்குகளும். சுமன் மீது 2 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

" 5 வருடம் முன்பு சிறுமியின் உடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் " சிக்கியது எப்படி ?
"ரூ.8.50 லட்சம் போச்சு... போலீஸ் நடவடிக்கை எடுக்கல!" - மயிலாடுதுறையில் கதறி அழுதபடி தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி!
" திருமணம் மீறிய உறவு " புறா புடிச்சு தர்றேன்டா - நம்பி போன சிறுவர்கள் தகாத உறவால் பலி
ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையா? மயிலாடுதுறை DRO-வை மிரட்டிய திமுக நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையா? மயிலாடுதுறை DRO-வை மிரட்டிய திமுக நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Embed widget