மேலும் அறிய

சென்னையில் அதிர்ச்சி; Bike Taxi - யில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - நடந்தது என்ன?

சென்னையில் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்சி ஓட்டுநர் கைது.

நானே தினமும் உங்களை அழைத்து செல்கிறேன்

சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அப்பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பைக் டாக்சி ஒன்று புக்கிங் செய்து புரசைவாக்கத்திலிருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்பெண்ணின் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பைக் டாக்சி ஓட்டுநர் நானே தினமும் உங்களை அழைத்து செல்கிறேன் என கூறியதன் பேரில் தினந்தோறும் அழைத்துச் சென்றுள்ளார்.

பெண்ணிடம் அத்து மீறிய பைக் டாக்ஸி ஓட்டுனர்

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை புரசைவாக்கத்திலிருந்து தேனாம்பேட்டைக்கு செல்லும் வழியில் அண்ணா மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பைக் டாக்சி ஓட்டுநர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அப்பெண் உடனே பைக்கை நிறுத்தச் சொல்லி இறங்கியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இருசக்கர வாகனம் பறிமுதல்

E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து , இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் ( வயது 45  )  என்பவரை கைது செய்தனர். குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய Honda Activa இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சதீஸ்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்து போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னை ஏர்போர்டில் கைது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் ( வயது 23 ) என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சென்னையை சேர்ந்த சைபுதின் ( வயது 51 ) என்பவர் போலந்து நாட்டில் Meat Cutter வேலை வாங்கி தருவதாக பணம் ரூ.1.25,000/-பெற்றுக் கொண்டு போலந்து நாட்டிற்கு வேலைக்கான விசா வாங்கி தராமலும் , பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியதாக பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணையில் சைபுதின் கடந்த 2023 - ம் ஆண்டு செயல்பாட்டில் இல்லாத Saif International என்ற கன்சல்டன்சி பெயரில் Protector of Emigrants-ல் மத்திய அரசின் உரிமம் பெறாமல் போர்ச்சுகல் , இத்தாலி , கேமேன் தீவு , போலந்து மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 193 நபர்களிடம் பணம் ரூ.2 கோடிக்கு மேல் வங்கி கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்ததால் , கடந்த 30.01.2025-ம் தேதி மாகம் வினய் வர்தன் என்பவர் இந்த குற்ற சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.

இவ்வழக்கில் எதிரி மாகம் வினய் வர்தனை தேடி வந்த நிலையில் அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அவருக்கு LOC கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 31.07.2025 - ம் தேதி போர்ச்சுகல் நாட்டில் தலை மறைவாக இருந்து வந்த மாகம் வினய் வர்தன் ( வயது 36 ) என்பவரை சொந்த ஊரான நெல்லூருக்கு வரும் போது சென்னை ஏர்போர்டில் வைத்து விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி ஆஜர் செய்யப்பட்டவரை , மத்திய குற்றப்பிரிவு , வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து மோசடி பணத்தில் வாங்கிய Dell லேப்டாப் Iphone -2, Apple watch - 1, நகைகள் மற்றும் யூரோ பணம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட மாகம் வினய் வர்தன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு  நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

வீடியோ

பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
’’இனிமேல் லஞ்சம் வாங்கினால் எனக்கு WHATSAPP பண்ணுங்க’’நம்பர் கொடுத்த CM விஜய்
''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget