மேலும் அறிய

என்னுடன் சேர்ந்து வாழ முடியாதா ? - கணவன் செய்த செயலால் மனைவி அதிர்ச்சி

சென்னையில் பிரிந்து வாழ்ந்து வரும் மனைவியை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது.

சென்னை யானைகவுனி கல்யாணபுரம் பகுதியில், பிரீத்தனா (எ) ஏஞ்சல் ( வயது 22 ) அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக , கடந்த 2024 ம் ஆண்டு கணவரை பிரிந்து யானை கவுனியில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

தன்னுடன் சேர்ந்து வாழ முடியாதா ?

மனோஜ் அடிக்கடி பிரீத்தனா (எ) ஏஞ்சலிடம் சேர்ந்து வாழ வருமாறு கூறி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரீத்தனா (எ) ஏஞ்சல் கடந்த 06.05.2025 அன்று இரவு சௌகார்பேட்டை , பொம்மிலியார் தெருவில் அவரது உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மனோஜ் அவதூறாக பேசி , என்னுடன் சேர்ந்து வாழ வர முடியதா என கேட்டு தகராறு செய்து கத்தியால் பிரீத்தனா (எ) எஞ்சலை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இரத்த காயமடைந்த பிரீத்தனா (எ) ஏஞ்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இது குறித்து C-2 யானைகவுனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

7 குற்ற வழக்குகள்

C-2 யானைகவுனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , வழக்கில் சம்பந்தப்பட்ட மனோஜ் ( வயது 26 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலை செய்த வீட்டில் பணத்தை திருடிய பெண் கைது

சென்னை சூளைமேடு பெரியார் பாதை , கன்னியப்பன் தெருவில் வசித்து வரும் சுரேந்தர் ( வயது 40 ) இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 05.05.2025 அன்று பீரோவில் வைத்திருந்த பணத்தை சரி பார்த்த போது ரூ. 45,000/- காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இது குறித்து சுரேந்தர் F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , புகார் தாரரின் வீட்டில் வேலை செய்து வந்த வசந்தி என்பவரை பிடித்து விசாரணை செய்த போது , அவர் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததின் பேரில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வசந்தி ( வயது 49 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.40,000/- மீட்கப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட வசந்தி புகார் தாரர் சுரேந்தரின் உடல் நிலை சரியில்லாத தாயாரை உடனிருந்து கவனித்து கொள்வதற்காக கடந்த மாதம் மேற்படி வீட்டில் வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி வேலை செய்து வந்ததும் , பீரோவிலிருந்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட வசந்தி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Tamilisai Sholinganallur constituency : சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
Top 10 News Headlines: கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Tamilisai Sholinganallur constituency : சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
Top 10 News Headlines: கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு. ! இனி கட்டாயம் இதை செய்தே ஆகனும்- வெளியான சுற்றறிக்கை
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு. ! இனி கட்டாயம் இதை செய்தே ஆகனும்- வெளியான சுற்றறிக்கை
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
Embed widget