மேலும் அறிய

என்னுடன் சேர்ந்து வாழ முடியாதா ? - கணவன் செய்த செயலால் மனைவி அதிர்ச்சி

சென்னையில் பிரிந்து வாழ்ந்து வரும் மனைவியை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது.

சென்னை யானைகவுனி கல்யாணபுரம் பகுதியில், பிரீத்தனா (எ) ஏஞ்சல் ( வயது 22 ) அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக , கடந்த 2024 ம் ஆண்டு கணவரை பிரிந்து யானை கவுனியில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

தன்னுடன் சேர்ந்து வாழ முடியாதா ?

மனோஜ் அடிக்கடி பிரீத்தனா (எ) ஏஞ்சலிடம் சேர்ந்து வாழ வருமாறு கூறி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரீத்தனா (எ) ஏஞ்சல் கடந்த 06.05.2025 அன்று இரவு சௌகார்பேட்டை , பொம்மிலியார் தெருவில் அவரது உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மனோஜ் அவதூறாக பேசி , என்னுடன் சேர்ந்து வாழ வர முடியதா என கேட்டு தகராறு செய்து கத்தியால் பிரீத்தனா (எ) எஞ்சலை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இரத்த காயமடைந்த பிரீத்தனா (எ) ஏஞ்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இது குறித்து C-2 யானைகவுனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

7 குற்ற வழக்குகள்

C-2 யானைகவுனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , வழக்கில் சம்பந்தப்பட்ட மனோஜ் ( வயது 26 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலை செய்த வீட்டில் பணத்தை திருடிய பெண் கைது

சென்னை சூளைமேடு பெரியார் பாதை , கன்னியப்பன் தெருவில் வசித்து வரும் சுரேந்தர் ( வயது 40 ) இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 05.05.2025 அன்று பீரோவில் வைத்திருந்த பணத்தை சரி பார்த்த போது ரூ. 45,000/- காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இது குறித்து சுரேந்தர் F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , புகார் தாரரின் வீட்டில் வேலை செய்து வந்த வசந்தி என்பவரை பிடித்து விசாரணை செய்த போது , அவர் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததின் பேரில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வசந்தி ( வயது 49 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.40,000/- மீட்கப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட வசந்தி புகார் தாரர் சுரேந்தரின் உடல் நிலை சரியில்லாத தாயாரை உடனிருந்து கவனித்து கொள்வதற்காக கடந்த மாதம் மேற்படி வீட்டில் வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி வேலை செய்து வந்ததும் , பீரோவிலிருந்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட வசந்தி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget