மேலும் அறிய

Chennai: தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி.! சென்னையில் தற்கொலை செய்த பிளஸ் 1 மாணவி

தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி கடிதம் எழுதி வைத்துவிட்டு அச்சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தில், பிளஸ் 1 படித்துவந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி கடிதம் எழுதி வைத்துவிட்டு அச்சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் பி.இ.கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வில்லிவாக்கத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தாட்சாயினி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்தத் தம்பதிக்கு பவதாரணி (16) பவன் கல்யாண் (16) என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று மார்ச் 31 ஆம் தேதி கமல்ராஜ் வழக்கம் போல் டெய்லர் கடைக்குச் சென்றார். பின்னர் குழந்தைகள் இருவரும் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனர். மாலை வீடு திரும்பியதும் டியூஷன் செல்வது வழக்கம். ஆனால் நேற்று பவதாரணி உடல்நிலை சரியில்லை எனக் கூறி டியூஷனுக்கு வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் பவன் கல்யாண் மட்டும் டியூஷனுக்குச் சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பவதாரணி கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். வழக்கம்போல் வேலை முடித்துத் திரும்பிய தந்தை கமல்ராஜ், படுக்கையறையில் மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து உறைந்து போயுள்ளார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து பவதாரணியை கீழே இறக்கி பரிசோதித்த போது அவர் உடலில் உயிரில்லை. பின்னர் அயனாவரம் போலீஸார் வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மாணவி தூக்கில் தொங்கிய அறையில் ஒரு கடிதம் இருந்தது. அக்கடிதத்தில்,ஆங்கிலத்தில் I am going to death. It is all over finish என்று எழுதிவைத்திருந்தார். அதன் கீழே கண்ணீர் அஞ்சலி பவதாரணி என்று தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியிருந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் மறைந்த சோகமா இல்லை வேறேனும் காரணமா என்ற கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Chennai: தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி.! சென்னையில் தற்கொலை செய்த பிளஸ் 1 மாணவி

தற்கொலை தீர்வல்ல..
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

"அதிமுகவிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்தா இதப் பண்ணட்டும்!" எம்பி சுதா..
4 சிறுமிகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச் பாதிரியார்
4 சிறுமிகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச் பாதிரியார்
மயிலாடுதுறையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: 25 வயது பெண்ணுக்கு அதிகாலை நேர்ந்த கொடூரம்!
மயிலாடுதுறையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: 25 வயது பெண்ணுக்கு அதிகாலை நேர்ந்த கொடூரம்!
"பள்ளிக்கு போகவே பயமா இருக்கு!" - தலைமையாசிரியர் கெடுபிடியால் மண்ணெண்ணெய் குடித்த 12-ஆம் வகுப்பு மாணவி...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
Russia India Ties: நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
ராவணன் மவன்டா.. யமஹாவின் Yamaha FZ X பைக்கில் இவ்வளவு சிறப்புகளா?
ராவணன் மவன்டா.. யமஹாவின் Yamaha FZ X பைக்கில் இவ்வளவு சிறப்புகளா?
மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
Enfield Hunter 350 Vs Triumph Speed 400: என்ஃபீல்ட் ஹண்டர் 350-ஆ.? ட்ரையம்ப் ஸ்பீட் 400-ஆ.? உங்களுக்கு பொருத்தமானது எது.? ஒப்பீடை பாருங்கள்
என்ஃபீல்ட் ஹண்டர் 350-ஆ.? ட்ரையம்ப் ஸ்பீட் 400-ஆ.? உங்களுக்கு பொருத்தமானது எது.? ஒப்பீடை பாருங்கள்
Embed widget