மேலும் அறிய

விளம்பரம் செய்ய யாருக்கு சுவர்...? இரு கட்சிகளிடையே வளர்ந்த பகை... பலியான திமுக பிரமுகர்.. என்ன நடந்தது?

திமுக பிரமுகர் சவுந்தரராஜனை 2 பைக்கில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக தலையில் வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பிராட்வே அருகே உள்ள பூக்கடை பேருந்து நிலையத்தில் ஜூஸ் மற்றும் பழக்கடை நடத்தி வந்தவர் 59 வயதான சவுந்தரராஜன். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள் உள்ளனர். முன்னதாக, சவுந்தரராஜன் அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து வந்தார். பின்னர் அவர் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பூக்கடை பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற இருந்தது. அங்கு வைத்து 2 பைக்கில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக சவுந்தரராஜனை தலையில் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வியாசர்பாடியைச் சேர்ந்த 22 வயதான வசந்த்குமார் என்ற நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திமுகவைச் சேர்ந்த சவுந்தரராஜன் கடந்தவாரம் பூக்கடை பகுதியில் சுவர் விளம்பரம் செய்து கொண்டிருந்ததாகவும் வழக்கமாக அந்த சுவரில் அதிமுகவினர் சுவர் விளம்பரம் எழுதுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் நடத்த திட்டமிட்டுருந்தனர். ஆனால், அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்ததால் திமுக சார்பில் பிரமாண்டமாக தண்ணீர் பந்தல் ஏற்பாடுகளை செய்திருந்தார் சவுந்தரராஜன். அதன் அருகிலேயே சுவர் விளம்பரங்களையும் எழுதி இருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த கணேசன் என்பவர், 'வழக்கமாக இந்த இடத்தில் நாங்கள் தான் சுவர் விளம்பரம் எழுதுவோம்' என்று கூறியுள்ளார். அப்போது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது 


விளம்பரம் செய்ய யாருக்கு சுவர்...? இரு கட்சிகளிடையே வளர்ந்த பகை... பலியான திமுக பிரமுகர்.. என்ன நடந்தது?

இதுகுறித்து சவுந்தரராஜன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தபோலீசார் கணேசனை அழைத்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மற்றும் அவரது மகன்கள் சதீஷ், தினேஷ், கணேசனின் மைத்துனர் இன்பா மற்றும் சிலர் சேர்ந்து சம்பவத்தன்று சவுந்தரராஜனை வெட்டி கொலை செய்ததாகவும், அதற்கு வசந்த்குமார் துணையாக இருந்ததாகவும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வசந்த்குமாரை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கணேசனின் மகன் சதீஷ் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான கணேசன் அவரது மகன் தினேஷ், மைத்துனர் இன்பா, கார்த்திக், குமரேசன் ஆகிய 5 பேரும் நேற்று மதியம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கணேசனின் மகனும் வழக்கறிஞருமான சதீஷ்குமார் மட்டும் நீதிமன்றத்தில் பதுங்கி இருந்தார். அவர் நேற்றிரவு 10 மணியாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து, மாவட்ட நீதிபதியின் அனுமதி பின் படி நீதிமன்றத்தின் உள்ளே சென்ற காவல்துறையினர் பார்கவுன்சில் அறையில் பதுங்கி இருந்த சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்காக காவல்துறையினர் சதீஷை அழைத்துச் சென்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Embed widget