மேலும் அறிய

சென்னை விமான நிலையத்தை அலறவிட்ட பயணி... பச்சை நிறத்தில் அட்டைப்பெட்டியில் இருந்த உயிர்

பச்சோந்திகளை சட்டவிரோதமாக மறைத்து, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை.

தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த 402 பச்சோந்திகளை, சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமியை கைது செய்தனர். 

பயணி மீது சந்தேகம்

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று ஞாயிறு அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளில், சந்தேகப்பட்ட பயணிகளை, சுங்க அதிகாரிகள் நிறுத்தி பரிசோதித்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், இரண்டு பெரிய அட்டைப்பட்டிகளுடன், இந்த விமானத்தில் வந்து, கன்வேயர் பெல்டில் வந்த அட்டைப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு, தன்னிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார்.

ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள்

ஆனால் சுங்க அதிகாரிகளுக்கு அந்த ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை நிறுத்தி அந்த இரண்டு அட்டைப்பெட்டிகளிலும் என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் மற்றும் சாக்லேட், பிஸ்கட்கள் இருக்கின்றன என்று கூறினார். ஆனாலும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில், அந்த இரண்டு அட்டைப்பட்டிகளையும் திறந்து பார்த்து சோதனை நடத்தினர். அந்த அட்டை பெட்டிக்குள், நேரத்துக்கு தகுந்தார் போல் நிறங்களை மாற்றிக் கொள்ளும்,(Baby Lguana) என்ற ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள், பச்சை,நீலம், மஞ்சள், மற்றும் ஆரஞ்சு கலர்களில் உயிருடன்  இருந்தன.

இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்க அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வன உயிரின காப்பகம் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக வன உயிரின காப்பக குற்றப்பிரிவு அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அந்த ஆப்பிரிக்க வகை பச்சோந்திகளை ஆய்வு செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த பயணி இடமும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பச்சோந்திகள், முறையான ஆவணங்கள் இல்லாமல் கடத்திக் கொண்டு வரப்பட்டது என்று தெரிந்தது.

மேலும் இந்த பச்சோந்திகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய்க்கிருமிகள் இங்கு பரவி, விலங்குகள், பறவைகள், மற்றும் மனித உயிரினம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவித்தனர். சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இந்த பச்சோந்திகளை, எந்த விமானத்தில் வந்ததோ அதே விமானத்தில், வந்த நாட்டுக்கே திருப்ப முடிவு செய்தனர். அதோடு முறையான ஆவணங்கள் இன்றி  கடத்திக் கொண்டு வந்த, பயணியை  கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கைகள் எடுத்தனர்.

402 பச்சோந்திகள்

இதற்கிடையே பயணி வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகளிலும், 402   பச்சோந்திகள் இருந்தன. அவைகளில் 67 பச்சோந்திகள், அட்டைப்பட்டிக்குள் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்து விட்டன. இதை அடுத்து அதிகாரிகள் உயிரிழந்த, பச்சோந்திகளை அகற்றிவிட்டு, மற்ற 335 பச்ச பச்சோந்திகளை, அதே அட்டைப் பெட்டிகளில் அடைத்து வைத்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம், இன்று அதிகாலை பாங்காக்கிற்கு திருப்பி அனுப்பினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget