மேலும் அறிய

சென்னை அருகே ரயிலில் அடிபட்டு காதல் ஜோடிகள் மரணம் - தற்கொலையா என போலீஸ் விசாரணை

ரயில்வே தண்டவாளத்தில் காதல் ஜோடிகள் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இரவில்...
 
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நிலையம் - சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியான, பேரமனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி  ரயில் சென்று கொண்டு  இருந்தது. அப்பொழுது பேரமனூர் பகுதியில் , மூன்றாவது தண்டவாளம் அருகே , அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் தொடர் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 

சென்னை அருகே ரயிலில் அடிபட்டு காதல் ஜோடிகள் மரணம் - தற்கொலையா என போலீஸ் விசாரணை
 
சம்பவ இடத்தில் பலி
 
இதனை அடுத்து தொடர்வண்டியை இயக்கி வந்த, ஓட்டுநர் உடனடியாக சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தொடர்வண்டி நிலைய அலுவலகத்திற்கு, சென்று இந்த சம்பவம் குறித்து தகவல் பதிவு செய்தார். இதனையடுத்து இதுகுறித்த தகவல் தாம்பரம் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைஅடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இருப்புப் பாதை காவலர்கள் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர். இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் ,  விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் 25 வயதிற்குள்ளே இருக்கும் என்பதால், தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். நள்ளிரவில் விபத்து நடைபெற்றதால், சுமார் காலை 9 மணி வரை இருப்பு பாதியிலேயே உயிரிழந்த இருவரின் உடல் இருந்தது..
 
 

சென்னை அருகே ரயிலில் அடிபட்டு காதல் ஜோடிகள் மரணம் - தற்கொலையா என போலீஸ் விசாரணை
 
உள்ளூர் கபடி வீரர்
 
இதனை அடுத்து உயிரிழந்தவர்களிடம் இருந்த உடமைகளை கைப்பற்றிய காவல் துறையினர், அவர்கள் செல்போனை கைப்பற்றி அதிலிருந்து தொலைபேசி மூலம் விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து,  முதற்கட்டமாக நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர், கடலூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (22), என்பதும் இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில்  கடந்த பத்து மாதத்திற்கு மேலாக பணியாற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அலெக்ஸ் கடலூர் பகுதியில் பிரபல கபடி வீரராகவும் இருந்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி வேலை  செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உடன் இருந்த பெண் விபரமும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை அருகே ரயிலில் அடிபட்டு காதல் ஜோடிகள் மரணம் - தற்கொலையா என போலீஸ் விசாரணை
 
 
உயிரிழப்பு
 
உயிரிழந்த பெண் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் (21) இவரும், மறைமலைநகர் பகுதியில் உள்ள அதே தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. இருவரும் அதே பகுதியில் தங்கி வந்ததால், அலெக்ஸ் மற்றும் ஷெர்லின் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். அதேபோல் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பேசி பழகியும் வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல், இருவரும் நள்ளிரவில் சந்தித்து ரயில்வே இருப்பு பாதை அருகே, பேசிக் கொண்டிருந்த இப்பொழுது தான் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

சென்னை அருகே ரயிலில் அடிபட்டு காதல் ஜோடிகள் மரணம் - தற்கொலையா என போலீஸ் விசாரணை
 
இதனை அடுத்து தாம்பரம் ரயில்வே போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து, இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இளம் காதல் ஜோடிகள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Embed widget