![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
17 வயது சிறுமிக்கு கருகலைப்பு?: அரசு மருத்துவரிடம் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டிய ஆய்வாளர் சஸ்பெண்ட்!
காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறி, அரசு மருத்துவரை மிரட்டி 12 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார்
![17 வயது சிறுமிக்கு கருகலைப்பு?: அரசு மருத்துவரிடம் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டிய ஆய்வாளர் சஸ்பெண்ட்! Chengalpattu guduvancheri A 17-year-old girl from Katangulathur area was accused of threatening a government doctor and accepting a bribe of Rs 12 lakh, claiming that she had performed an abortion 17 வயது சிறுமிக்கு கருகலைப்பு?: அரசு மருத்துவரிடம் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டிய ஆய்வாளர் சஸ்பெண்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/11/cae97714b31abd3f9358084e351a305c1689047150611113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மகிதா , என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் புகார் தர வரும் நபர்களிடம் வழக்கு பதிவு செய்யாமல், சமரசம் செய்து வைத்து கணிசமான தொகை பார்த்து வருவதாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது இருந்து.
ஓசி ஜூஸ் கேட்டு தகராறு
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய, பெண் காவலர்கள் சிலர் ஒரகடத்தில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்று, ஊழியரை மிரட்டி ஓசியில் ஜூஸ் கேட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஆய்வாளரும் அதே கதை
இந்தநிலையில், தற்போது ஆய்வாளராக பணியாற்றி வரும், மகிதா மைதா கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஆய்வாளராக பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, மருத்துவர் ஒருவர் கருகலைப்பு செய்ததாக அவருக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் புகாரை வைத்துக் கொண்டு , அரசு மருத்துவரிடம் 12 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக தாம்பரம் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
சஸ்பெண்ட் செய்து உத்தரவு
இந்த புகாரை பெற்றுக் கொண்ட தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில் தற்பொழுது ஆய்வாளர் மகிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் நிலைய காவல் நிலையத்தின் மீதும் பல்வேறு புகார்கள் இருந்திருக்கும், சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)