மேலும் அறிய

சிறுமியை காதலித்த சிறுவன்... அடித்தே கொன்ற சிறுமியின் தந்தை! வேலூரில் பதட்டம்!

சிறுமியின் தந்தை ராஜகுரு (41), தன் மகனை தாக்கியதாக கூறி சிறுவனின் தந்தை கார்த்தி, பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த அக் 26ஆம் தேதி புகார் அளித்தார்


வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 14 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ம் தேதி சிறுமி, சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடியதாக காவல் நிலையத்தில் சிறுமி வீட்டினர் புகார் அளித்திருந்தனர். 

காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தாலும் இருவரையும் சிறுமியின் வீட்டாரே தேடி கண்டுபிடித்துவிட்டனர். அதனையடுத்து கடந்த 24ஆம் தேதி சிறுவனை சாய்நாதபுரத்தில் உள்ள பெண்ணின் வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவனை மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறி கடந்த அக். 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுமி  வீட்டாரே சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இத்தகவல் சிறுவன் வீட்டாருக்கு தெரியவர, சிறுமியின் தந்தை ராஜகுரு (41) சிறுவனை தாக்கியதாக கூறி சிறுவனின் தந்தை கார்த்தி பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த அக் 26ஆம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜகுருவை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 


சிறுமியை காதலித்த சிறுவன்... அடித்தே கொன்ற சிறுமியின் தந்தை! வேலூரில் பதட்டம்!

இச்சூழலில்,  “என் மகன் காதலித்த சிறுமி வேறு சமுதாயத்தை சேர்ந்தவர். சிறுமியின் தந்தை ராஜகுரு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். இருவரும் வீட்டை விட்டுச் சென்ற காரணத்தால் சிறுமி வீட்டார் என் மகனை கடுமையாக தாக்கியுள்ளனர். ஆனால், என் மகன் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது ராஜகுரு உள்ளிட்டோர் தாக்கியதாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

எனவே உரிய விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று சிறுவனின் தந்தை கார்த்தி வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த அக் 27ஆம் தேதி மற்றொரு புகாரை  அளித்திருந்தார்.


சிறுமியை காதலித்த சிறுவன்... அடித்தே கொன்ற சிறுமியின் தந்தை! வேலூரில் பதட்டம்!

இருப்பினும் காவல் துறையினர் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த அக் 29ஆம் தேதி சிறுவனின் குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் தொடர்புடைய மாதவன், செல்வகுமார் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில், இன்று (நவ 06) சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தான். இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும், இக்கொலைக்கு காரணமானதாக கூறப்படும் 11 பேரையும் கைது செய்யக்கோரியும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர். 


சிறுமியை காதலித்த சிறுவன்... அடித்தே கொன்ற சிறுமியின் தந்தை! வேலூரில் பதட்டம்!

வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சிறுவனின் தந்தை மற்றும் உறவினர்களுடன் பேச்சை வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget