மேலும் அறிய

சிறுமியை காதலித்த சிறுவன்... அடித்தே கொன்ற சிறுமியின் தந்தை! வேலூரில் பதட்டம்!

சிறுமியின் தந்தை ராஜகுரு (41), தன் மகனை தாக்கியதாக கூறி சிறுவனின் தந்தை கார்த்தி, பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த அக் 26ஆம் தேதி புகார் அளித்தார்


வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 14 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ம் தேதி சிறுமி, சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடியதாக காவல் நிலையத்தில் சிறுமி வீட்டினர் புகார் அளித்திருந்தனர். 

காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தாலும் இருவரையும் சிறுமியின் வீட்டாரே தேடி கண்டுபிடித்துவிட்டனர். அதனையடுத்து கடந்த 24ஆம் தேதி சிறுவனை சாய்நாதபுரத்தில் உள்ள பெண்ணின் வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவனை மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறி கடந்த அக். 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுமி  வீட்டாரே சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இத்தகவல் சிறுவன் வீட்டாருக்கு தெரியவர, சிறுமியின் தந்தை ராஜகுரு (41) சிறுவனை தாக்கியதாக கூறி சிறுவனின் தந்தை கார்த்தி பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த அக் 26ஆம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜகுருவை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 


சிறுமியை காதலித்த சிறுவன்... அடித்தே கொன்ற சிறுமியின் தந்தை! வேலூரில் பதட்டம்!

இச்சூழலில்,  “என் மகன் காதலித்த சிறுமி வேறு சமுதாயத்தை சேர்ந்தவர். சிறுமியின் தந்தை ராஜகுரு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். இருவரும் வீட்டை விட்டுச் சென்ற காரணத்தால் சிறுமி வீட்டார் என் மகனை கடுமையாக தாக்கியுள்ளனர். ஆனால், என் மகன் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது ராஜகுரு உள்ளிட்டோர் தாக்கியதாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

எனவே உரிய விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று சிறுவனின் தந்தை கார்த்தி வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த அக் 27ஆம் தேதி மற்றொரு புகாரை  அளித்திருந்தார்.


சிறுமியை காதலித்த சிறுவன்... அடித்தே கொன்ற சிறுமியின் தந்தை! வேலூரில் பதட்டம்!

இருப்பினும் காவல் துறையினர் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த அக் 29ஆம் தேதி சிறுவனின் குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் தொடர்புடைய மாதவன், செல்வகுமார் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில், இன்று (நவ 06) சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தான். இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும், இக்கொலைக்கு காரணமானதாக கூறப்படும் 11 பேரையும் கைது செய்யக்கோரியும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர். 


சிறுமியை காதலித்த சிறுவன்... அடித்தே கொன்ற சிறுமியின் தந்தை! வேலூரில் பதட்டம்!

வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சிறுவனின் தந்தை மற்றும் உறவினர்களுடன் பேச்சை வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget