மேலும் அறிய

மாயமான இளம் ஆசிரியை! உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு - பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

கர்நாடகாவில் பள்ளிக்குச் சென்ற ஆசிரியை மாயமான நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது மாண்டியா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பாண்டவபுர தாலுகாவில் அமைந்துள்ள மாணிக்யாகாளியில் வசித்து வந்தவர் தீபிகா. அவருக்கு வயது 28. இவர் அங்கிருந்த பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தீபிகாவிற்கு வெங்கடேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.

மாயமான ஆசிரியை:

இந்த நிலையில், கடந்த 20ம் தேதி தீபிகா வழக்கம்போல பள்ளிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். வேலைக்குச் சென்ற தீபிகா அன்று இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனுக்கு அழைத்துபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தீபிகா குடும்பத்தினர் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, காவல்துறையினர் அவரது செல்போன் சிக்னல் கடைசியாக காட்டிய இடம் ஆகிய தடயங்களை வைத்து விசாரணை நடத்தினர். அவரை கடைசியாக அங்கிருந்த கோயில் அருகே சிலர் பார்த்துள்ளனர். அதன்பின்பு, அவரை யாரும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு கடைசியாக தீபிகா வசிக்கும் கிராமத்தில் வசிக்கும் நிதின் கவுடா என்ற இளைஞர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து பேசியுள்ளார்.

சடலமாக மீட்பு:

இந்த நிலையில், தீபிகாவின் ஸ்கூட்டர் மேலுகோட்டேவில் உள்ள பூட்ஹில்ஸ்  மலைப்பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது, அங்கே எரிந்த நிலையில் சடலம் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த சடலம் மாயமான ஆசிரியை தீபிகாவின் சடலம் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

தீபிகாவை முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்து பின்னர் உடலை எரித்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீபிகாவுடன் கடைசியாக செல்போனில் பேசிய நிதின் கவுடா தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீபிகாவை நிதின் கவுடாதான் கொலை செய்தாரா? தீபிகாவின் மரணத்திற்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஆசிரியை தீபிகாவை பாலியல் வன்கொடுமை செய்தே கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் அதிர்ச்சி:

மேலும், கொலை செய்யப்பட்ட தீபிகா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்குச் சென்ற ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

 மேலும் படிக்க: Cyber Crime: ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம்; ரூ.1 கோடியே 26 லட்சத்தை இழந்த நபர்

மேலும் படிக்க: Crime: உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்! ஆசையில் ஓடிய வாலிபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பணமும் அபேஸ்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget