மேலும் அறிய

Crime: 18 வயது எம்பிபிஎஸ் மாணவி.. 20 வயது நண்பனின் துரோகம், வீடியோ, ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம்

Crime: மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 18 வயது மாணவியை, 20 வயது இளைஞர் ஒரு மாத காலமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: மருத்துவக் கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

வடகிழக்கு டெல்லியின் ஆதர்ஷ் நகரில் தன்னுடன் பழகிய மருத்துவ கல்லூரி மாணவியை பார்ட்டி என்ற பெயரில் தனது அறைக்கு வரவழைத்த இளைஞர், ரகசியமாக குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த நேரத்தில் அந்த பெண்ணிடம் இளைஞர் அத்துமீறி நடந்துகொண்டதை, அவரது இரண்டு நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புவேன் என மிரட்டி, அந்த மாணவியை முக்கிய குற்றவாளியான 20 வயது இளைஞர் ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

நடந்தது என்ன?

காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட மாணவி ஹரியான மாநிலம் ஜிந்த் பகுதியை சேர்ந்தவர் ஆவார். தற்போது டெல்லியில் உள்ள விடுதியில் தங்கி தனது மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் டெல்லியில் தங்கி போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும், அதே ஜிந்த் பகுதியை சேர்ந்த இளைஞர் அந்த மாணவியை பார்ட்டிக்கு வரும்படி கடந்த செப்டம்பர் 9ம் தேதி அழைத்துள்ளார். ஒரே பகுதியை சேர்ந்தவர் மற்றும் ஏற்கனவே நன்கு அறிந்தவர் என்பதால், அந்த பெண்ணும் அந்த பார்டிக்காக சென்றுள்ளார். அப்போது தான் இந்த ஒட்டுமொத்த சம்பவமும் நடந்துள்ளது. அந்த வீடியோவை காட்டி செப்டம்பர் மாதம் முழுவதும் பல்வேறு சூழல்களில் அந்த மாணவியை அவரது நண்பன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

ஆரம்பத்தில் வாழ்க்கை கெட்டுவிடுமோ? குடும்பத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சத்தில், மிரட்டலுக்கு பயந்த மாணவி ஒருகட்டத்தில் நடந்த மொத்த உண்மையையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பக்கபலமாக இருந்ததோடு, கடந்த அக்டோபர் 2ம் தேதி காவல்துறையை அணுகி புகாரளிக்கவும் உதவியுள்ளனர்.

குற்றவாளிகளை தேடி வரும் போலீசார்..

பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள 3 குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.  கடந்த ஆகஸ்ட் மாதம் தான் வடக்கு டெல்லியின் சிவில் லைன்ஸில் 24 வயது பெண் ஒருவர், நான்கு ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அந்த வழக்கில் ஒரு தொலைக்காட்சி நடிகர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண் தான் ஒரு பார்ட்டிக்கு சென்றதாகவும், அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு மதுபானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு மாணவியும் அதே பாணியில் பாலியல் பலாத்கார கொடுமையை எதிர்கொண்டுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Embed widget