மேலும் அறிய

ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?

Bihar Crime: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கிராம மக்கள் அடித்துக் கொன்று, தீயிட்டு எரித்த பயங்கர சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.

Bihar Crime: மாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நினைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

5 பேரை அடித்துக் கொன்ற கும்பல்:

பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் மாந்திரீக பணியில் ஈடுபடுவதாக சந்தேகப்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை, உள்ளூர் மக்கள் சிலர் சேர்ந்து அடித்துக் கொன்றதோடு, அவர்களது உடலையும்தீயிட்டு எரித்துள்ளனர். கிராமத்தில் அண்மையில் நடந்த சில மரணங்களுக்கு, அந்த குடும்பத்தின் நடவடிக்கைகளே காரணம் என கூறி இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அந்த குடும்பத்தினரின் அமானுஷ்ய சடங்குகளால் கிராமத்தில் புதிய நோய் பரவுவதாகவும் கருதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் பாபுலால் ஓரான், சீதா தேவி, மஞ்சீத் ஓரான், ரானியா தேவி மற்றும் தப்டோ மோஸ்மத் ஆகிய 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை சொல்வது என்ன?

கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் தங்களது குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக, அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளது. குழந்தை மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான தெளிவான தகவல் எதையும் வழங்க முடியாத நிலையில் இருப்பதாலும், தற்போது வரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை தரபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், போலீசார் மோப்ப நாயுடன் அந்த கிராமத்தில் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.  

தாக்குதலில் தொடக்கப் புள்ளி:

மூன்று நாட்களுக்கு முன்பு டெட்காமா கிராமத்தில் பாரம்பரிய சிகிச்சை மற்றும் சடங்குகளை (ஜார்-பூங்க்) மேற்கொண்டு வந்த உள்ளூர்வாசி ராம்தேவ் ஓரான் என்பவரின் மகன் திடீரென உயிரிழந்துள்ளார். அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு குழந்தையும் நோய்வாய்ப்பட்டுள்ளது. இதற்கு கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என கருதியே, ஒட்டுமொத்த தாக்குதல் சம்பவமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைகள் தொடர்பாக, பொதுமக்களை தூண்டிவிட முயன்றதாகக் கூறி, நகுல் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பூர்னியா காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வீட்டி செஹ்ராவத், இந்த சம்பவம் ஒரு பழங்குடி கிராமத்தில் நடந்ததாக தெரிவித்தார். மேலும், இந்த கொலைகள் ஜார்-பூங்க் மற்றும் தந்திர-மந்திரத்துடன் தொடர்புடையது என்றும் தெரிவித்துள்ளார். உடல்களை எரிப்பதற்கு முன்பு 5 பேரும் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

4 உடல்கள் மீட்பு:

எரிந்து சிதிலமடைந்த நிலையில் 4 உடல்கள் கண்டறியப்பட்ட நிலையில், மேலும் ஒரு உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பூர்னியா கொலைகள் தொடர்பாக நிதிஷ் குமார் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து, "இரண்டு நாட்களுக்கு முன்பு, சிவானில் நடந்த படுகொலையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். சமீபத்திய நாட்களில், பக்சாரில் நடந்த படுகொலையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். போஜ்பூரில் நடந்த படுகொலையில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் எச்சரிக்கையாக உள்ளனர், முதல்வர் மயக்கமடைந்துள்ளார்" என்று சமூக வலைதளத்தில் சாடியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget