மேலும் அறிய

பொய் சொன்ன மகளை குத்திக் கொலை செய்த தாய்! நீதிமன்றம் தந்த தண்டனை என்ன?

பெங்களூரில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக பொய் சொன்ன மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது பனசங்கரி. இந்த பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் பீமநேனி பத்மினி ராணி. 59 வயதான இவர் அந்த பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார். 

பொய் சொன்ன மகள்:

பத்மனி ராணியின் கணவர் மல்லேஸ்வரராவ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஷாகிதி சிவப்பரியா என்ற மகள் இருந்தார். 17 வயதான அவர் கடந்தாண்டு அந்த மாநில 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். கடந்தாண்டு நடந்த பொதுத்தேர்வில் அவர் 95 சதவீத மதிப்பெண் எடுத்ததாக தனது தாய் பத்மினி ராணியிடம் தெரிவித்துள்ளார். 

ஆனால், உண்மையில் சாஹிதி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மேலும், அவர் பொதுத்தேர்வில் நான்கு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. தனது மகள் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தன்னிடம் பொய் கூறியதை அறிந்த பத்மினி ராணி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். இதனால், இதுதொடர்பாக சாஹிதியிடம் ராணி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ராணி மிகவும் அலட்சியமாகவும், ஆவேசமாகவும் பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ராணி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். 

குத்திக் கொலை செய்த தாய்:

இதனால், ஆத்திரமடைந்த பத்மினி ராணி தனது மகள் என்றும் பாராமல் சமையலறையில் இருந்த கத்தியால் அவளை குத்தி காெலை செய்துள்ளார். மேலும், தானும் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர், போலீசார் விசாரணையில் பத்மனி ராணி கூறியதாவது, "எனக்கும் எனது கணவருக்கும் திருமணம் ஆகி 16 வருடங்களுக்கு பிறகு எனது மகள் பிறந்தாள். எனது கணவர் 2020ம் ஆண்டு இறந்த பிறகு நான் அவளுடன் மிகவும் பாசமாக இருக்கத் தொடங்கினேன். ஆனால், அவள் அதே பாசத்துடன் இருக்கவில்லை. நான் அந்த சமயத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தேன். ஆனால், அவள் அதே அன்புடன் பாசத்துடன் என்னிடம் நடந்து கொள்ளவில்லை. அவள் எதிர்காலத்தில் மாறுவாள் என்று நம்பினேன். 

நடந்தது என்ன?

நான் எனது சகோதரர்களிடம் அவள் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், அவள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தேன். ஆனால், அவள் தேர்ச்சி அடைந்ததாக என்னிடம் பொய் கூறியிருந்தாள். ஒருவேளை அவர்களுக்கு உண்மை தெரிய வந்தால் அவமானத்தை சந்திக்க நேரிடும். அதனால், இறந்துவிடுவதே மேல் என்று கருதினேன். 

இதனால், சமையலறையில் இருந்த இரண்டு கத்தியை எடுத்து அவள் உடல் முழுவதும் குத்தினேன். பின்னர், எனது கையையும் கத்தியால் அறுத்துக் கொள்ள முயற்சித்தேன். பின்னர், எனது கணவர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் எங்களை மருத்துவமனைக்கு மீட்டுச் சென்றனர்."

இவ்வாறு அவர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்தார். 

ஆயுள் தண்டனை:

இந்த விவகாரத்தில் கடந்தாண்டு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மகளை கொலை செய்த வழக்கில் தாய் பத்மனி ராணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், அவருக்கு  ஆயுள் தண்டனையையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தால் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 

பெற்ற தாயே மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்போது பெங்களூரையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Embed widget