மேலும் அறிய

பொய் சொன்ன மகளை குத்திக் கொலை செய்த தாய்! நீதிமன்றம் தந்த தண்டனை என்ன?

பெங்களூரில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக பொய் சொன்ன மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது பனசங்கரி. இந்த பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் பீமநேனி பத்மினி ராணி. 59 வயதான இவர் அந்த பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார். 

பொய் சொன்ன மகள்:

பத்மனி ராணியின் கணவர் மல்லேஸ்வரராவ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஷாகிதி சிவப்பரியா என்ற மகள் இருந்தார். 17 வயதான அவர் கடந்தாண்டு அந்த மாநில 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். கடந்தாண்டு நடந்த பொதுத்தேர்வில் அவர் 95 சதவீத மதிப்பெண் எடுத்ததாக தனது தாய் பத்மினி ராணியிடம் தெரிவித்துள்ளார். 

ஆனால், உண்மையில் சாஹிதி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மேலும், அவர் பொதுத்தேர்வில் நான்கு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. தனது மகள் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தன்னிடம் பொய் கூறியதை அறிந்த பத்மினி ராணி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். இதனால், இதுதொடர்பாக சாஹிதியிடம் ராணி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ராணி மிகவும் அலட்சியமாகவும், ஆவேசமாகவும் பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ராணி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். 

குத்திக் கொலை செய்த தாய்:

இதனால், ஆத்திரமடைந்த பத்மினி ராணி தனது மகள் என்றும் பாராமல் சமையலறையில் இருந்த கத்தியால் அவளை குத்தி காெலை செய்துள்ளார். மேலும், தானும் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர், போலீசார் விசாரணையில் பத்மனி ராணி கூறியதாவது, "எனக்கும் எனது கணவருக்கும் திருமணம் ஆகி 16 வருடங்களுக்கு பிறகு எனது மகள் பிறந்தாள். எனது கணவர் 2020ம் ஆண்டு இறந்த பிறகு நான் அவளுடன் மிகவும் பாசமாக இருக்கத் தொடங்கினேன். ஆனால், அவள் அதே பாசத்துடன் இருக்கவில்லை. நான் அந்த சமயத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தேன். ஆனால், அவள் அதே அன்புடன் பாசத்துடன் என்னிடம் நடந்து கொள்ளவில்லை. அவள் எதிர்காலத்தில் மாறுவாள் என்று நம்பினேன். 

நடந்தது என்ன?

நான் எனது சகோதரர்களிடம் அவள் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், அவள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தேன். ஆனால், அவள் தேர்ச்சி அடைந்ததாக என்னிடம் பொய் கூறியிருந்தாள். ஒருவேளை அவர்களுக்கு உண்மை தெரிய வந்தால் அவமானத்தை சந்திக்க நேரிடும். அதனால், இறந்துவிடுவதே மேல் என்று கருதினேன். 

இதனால், சமையலறையில் இருந்த இரண்டு கத்தியை எடுத்து அவள் உடல் முழுவதும் குத்தினேன். பின்னர், எனது கையையும் கத்தியால் அறுத்துக் கொள்ள முயற்சித்தேன். பின்னர், எனது கணவர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் எங்களை மருத்துவமனைக்கு மீட்டுச் சென்றனர்."

இவ்வாறு அவர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்தார். 

ஆயுள் தண்டனை:

இந்த விவகாரத்தில் கடந்தாண்டு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மகளை கொலை செய்த வழக்கில் தாய் பத்மனி ராணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், அவருக்கு  ஆயுள் தண்டனையையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தால் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 

பெற்ற தாயே மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்போது பெங்களூரையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Iran Slams US: “அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
“அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
IND Vs ENG Test: 3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
Annamalai: ஞானசேகரன் வழக்கு; வாயை விட்ட அண்ணாமலை - கோர்ட்டுக்கு இழுத்த வழக்கறிஞர்
ஞானசேகரன் வழக்கு; வாயை விட்ட அண்ணாமலை - கோர்ட்டுக்கு இழுத்த வழக்கறிஞர்
வால்பாறை எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்: அதிமுகவில் எதிர்பாராத இழப்பு.. தொண்டர்கள் சோகம்!
வால்பாறை எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்: அதிமுகவில் எதிர்பாராத இழப்பு.. தொண்டர்கள் சோகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி
மிரட்ட ஆரம்பித்த பிரேமலதா! குழம்பி நிற்கும் EPS! தேமுதிகவினர் கொடுத்த ஐடியா
Thanjavur News : 30 லட்சம்..வெறும் 4 நாள்!சரிந்து விழும் ஊராட்சி கட்டிடம் கொந்தளிக்கும் தஞ்சை மக்கள்
Hindu Munnani Vs CPIM :  நடுரோட்டில் அடிதடி! இந்து முன்னணி vs மார்க்சிஸ்ட்‘’நீயெல்லாம் பேசலாமா?’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Slams US: “அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
“அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
IND Vs ENG Test: 3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
Annamalai: ஞானசேகரன் வழக்கு; வாயை விட்ட அண்ணாமலை - கோர்ட்டுக்கு இழுத்த வழக்கறிஞர்
ஞானசேகரன் வழக்கு; வாயை விட்ட அண்ணாமலை - கோர்ட்டுக்கு இழுத்த வழக்கறிஞர்
வால்பாறை எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்: அதிமுகவில் எதிர்பாராத இழப்பு.. தொண்டர்கள் சோகம்!
வால்பாறை எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்: அதிமுகவில் எதிர்பாராத இழப்பு.. தொண்டர்கள் சோகம்!
அணு ஆயுதத்தை சோதித்ததா ஈரான்.? பூகம்பம் வந்ததால் கிளம்பிய சந்தேகம் - நடந்தது என்ன.?
அணு ஆயுதத்தை சோதித்ததா ஈரான்.? பூகம்பம் வந்ததால் கிளம்பிய சந்தேகம் - நடந்தது என்ன.?
Valluvar Kottam: ரூ.80 கோடி கொட்டி அப்கிரேட், வள்ளுவர் கோட்டம் பெற்ற அப்டேட்கள் என்ன? புதிய வசதிகளின் விவரங்கள்
Valluvar Kottam: ரூ.80 கோடி கொட்டி அப்கிரேட், வள்ளுவர் கோட்டம் பெற்ற அப்டேட்கள் என்ன? புதிய வசதிகளின் விவரங்கள்
ஐபோன் உற்பத்தியில் அசத்தும் காஞ்சிபுரம்! களத்தில் இறங்கிய பாக்ஸ்கான்! வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?
ஐபோன் உற்பத்தியில் அசத்தும் காஞ்சிபுரம்! களத்தில் இறங்கிய பாக்ஸ்கான்! வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!
Embed widget