மேலும் அறிய

Crime: உ.பி.,யை அதிரவைத்த சிறுவர்கள் கொலை.. 2வது குற்றவாளியை கைது செய்த போலீசார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தில் தான் இந்த குற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள சாய்பாபா காலனியில் சலூன் கடை ஒன்றை சஜித் கான் என்ற நபர் நடத்தி வருகிறார்.

உத்திரப்பிரதேசத்தில் இரு சிறுவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டாவது குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தில் தான் இந்த குற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள சாய்பாபா காலனியில் சலூன் கடை ஒன்றை சஜித் கான் என்ற நபர் நடத்தி வருகிறார். இவருக்கு கடை அருகே மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் வினோத் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நட்பில் இருந்த வினோத்திடம் சஜித் ரூ.5 ஆயிரம் பணம் கேட்க, இவர் கொடுக்க மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சஜித் கான் வினோத் வீட்டுக்கு சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரின் மகன்களாக ஆயூஷ் (11), ஆஹான்(7) மற்றும் பியூஷ் ஆகிய 3 பேரையும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆயுஷ் மற்றும் ஆஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பியூஷ் இலேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சிறுவர்கள் இரட்டைக் கொலை வழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தை அதிர வைத்தது. 

உயிரிழந்த குழந்தைகளை மொத்தம் 23 முறை சஜித் தாக்கியிப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதனிடையே இந்த வழக்கில் போலீசார் கைது செய்யப்பட்ட சஜித் கான் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்த பின் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்த சிறுவர்கள் கொலை சம்பவத்தில் சஜித்தின் சகோதரன் ஜாவேத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தகவல் கொடுத்தால் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜாவேத் டெல்லியில் இருந்தார். சஜித் என்கவுண்டர் செய்யப்பட்டதால் பயந்துபோன அவர் போலீசில் சரணடைய முடிவு செய்தார். அதன்படி டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வந்த ஜாவேத்தை பேருந்து நிலையத்தில் வைத்து பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரிடம் தான் குழந்தைகள் கொன்ற விஷயத்தில் சிறிதும் தொடர்பில்லாதவன் என ஜாவேத் கூறியதாக கூறப்படுகிறது. இருந்தும் அவரிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 


மேலும் படிக்க: Crime: வெளிநாடு செல்ல கடத்தல் நாடகம்.. அப்பாவிடம் ரூ.30 லட்சம் பறிக்க முயன்ற மகள்!

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
Embed widget