மேலும் அறிய

மனைவி, மாமனார், மாமியார் வெட்டிக் கொலை.. 9 மாத கைக்குழந்தையுடன் சரணடைந்த இளைஞர்...!

மனைவி, மாமனார் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு 9 மாத கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் கணவன் சரண் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது கோலகட். இந்த பகுதியில் வசித்து வருபவர் சங்கமித்ரா கோஷ். இவரது தந்தை சஞ்ஜீப் கோஷ், தாய் ஜூனு கோஷ். சங்கமித்ராவின் தங்கை காசிரங்கா பல்கலைழகத்தில் படித்து வருகிறார்.

சிறையில் இருந்து வெளியே வந்த கணவர்:

சங்கமித்ராவிற்கு திருமணம் ஆகி 9 மாத குழந்தை உள்ளது. சங்கமித்ராவிற்கு அவரது கணவருக்கும் திருமணம் ஆனது முதல் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சங்கமித்ராவை அவரது கணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் மீது காவல் நிலையத்தில் சங்கமித்ரா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சங்கமித்ராவின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கணவர் சிறைக்கு சென்ற பிறகு சங்கமித்ரா கோலகட் மாவட்டத்தில் உள்ள இந்தி பள்ளி சாலையில் உள்ள தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறையில் இருந்து விடுதலையான பிறகு தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக சங்கமித்ராவின் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, காசிரங்கா பல்கலைகழகத்தில் படித்து வந்த சங்கமித்ராவின் தங்கை வீடியோ கால் மூலமாக பேசிக் கொண்டிருந்துள்ளார்.

மனைவி, மாமனார், மாமியார் கொலை:

அங்கே அவருடன் சங்கமித்ரா, சங்கமித்ரா பெற்றோர்களும் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களின் 3 பேருடனும் இணைந்து சங்கமித்ராவின் கணவர் சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சங்கமித்ராவின் கணவர், கோபத்தின் உச்சிக்கே சென்று மனைவி என்றும் பாராமல் சங்கமித்ராவை கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

சங்கமித்ராவை காப்பாற்ற வந்த அவரது  தந்தை சஞ்சீப் மற்றும் தாய் ஜூனு ஆகிய இருவரையும் அதே கத்தியால் வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த சங்கமித்ராவின் தங்கை பார்த்து அலறியுள்ளார். தனது மனைவி, மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்த சங்கமித்ராவின் கணவர் கோலாகட் காவல் நிலையத்திற்கு தன்னுடைய 9 மாத கைக்குழந்தையுடன் நேரில் சென்று சரண் அடைந்துள்ளார்.

9 மாத கைக்குழந்தையுடன் இளைஞர் கொலை குற்றத்திற்காக நீதிமன்றத்தில் சரண் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Crime: திருநங்கையிடம் பணம் கேட்டு போதை ஆசாமி தொந்தரவு; கட்டையால் பொளந்து கட்டிய திருநங்கைகள்

மேலும் படிக்க: Crime: லிவ் இன் பார்ட்னரின் கருவை கலைக்க, மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன் - உள்ளே தள்ளிய போலீஸ்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget