மேலும் அறிய

Actress Gautami: நடிகை கௌதமியை ஏமாற்றிய அழகப்பன்? 6 முறை சம்மன்”: மூன்று தனிப்படைகள் அமைத்த போலீஸ்

நடிகையும் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தவருமான நடிகை கௌதமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக முன்னதாக புகார் அளித்திருந்தார்.

பிரபல நடிகை கௌதமி அளித்த  நில மோசடி புகாரில்  தலைமுறைவாக உள்ள அழகப்பனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடிகையும் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தவருமான நடிகை கௌதமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார்.

கோட்டையூரில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவரான அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டதாகவும், 2004 ஆம் ஆண்டு தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முடிவெடுத்து அழகப்பன் உதவியை நாடியதாகவும், ஆனால் தன்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து கடந்த அக்.23ஆம் தேதி பாஜகவில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த கௌதமி, தான் 25 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தும் தேர்தல் நேரத்தில் கட்சியால் கைவிடப்பட்டதாகவும், பாஜகவின் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு துணையாக இருப்பதாகவும், கட்சியில் இருந்து எந்த ஆதரவும் தனக்கு கிடைக்காததாகவும் வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.

கௌதமியின் இந்த முடிவு சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கௌதமி புகார் அளித்த அழகப்பன் பாஜகவில் இல்லை என்றும்,  தான் கௌதமி பக்கம் ஆதரவாக இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கௌதமியின் புகாரின்பேரில், அழகப்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், 6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எவரும் ஆஜராகவில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல் அளித்துள்ளது.

மேலும், தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 நபர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget