மேலும் அறிய

தொழில் ஆசை காட்டி மோசடி! 110 சவரன் நகை, மிரட்டல்: அதிர்ச்சியில் பெண்!

திருமணம் செய்து கொள்வதாக கூறி தங்கநகை  மற்றும் பணத்தை பெற்று, பெண்ணை தாக்கி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய நபர் கைது.

உணவகம் தொழில் துவங்குவதாக கூறி ஏமாற்றம்

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கணவரை பிரிந்து வசிக்கும் 33 வயது பெண் அண்ணாநகர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு காப்பி கடை வைத்து நடத்திய போது , அறிமுகமான சிவா என்பவர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், உணவகத் தொழில் துவங்க இருப்பதாக கூறி அப்பெண்ணிடமிருந்து சிவா 110 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.1 இலட்சம் வாங்கியுள்ளார்.

புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்

இந்நிலையில், பெண்ணிற்கு சிவா வேறு ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக இதே போன்று ஆசைவார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து சிவாவிடம் கேட்டபோது பெண்ணை அவதூறாக பேசி கை மற்றும் காலால் தாக்கி இருவரும் பழகிய போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மேற்படி பெண் V-4 இராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act), தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட கொரட்டூர் பகுதியை சேர்ந்த சிவா ( வயது 51 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து  குற்ற செயலுக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சிவா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி , ஆபாச புகைப்படங்கள் பகிர்ந்த நபர் கைது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 21 வயது பெண்ணின் பெயரில் இன்ஸ்டாகிராம் சமூக வலைளதளத்தில் போலியான பல கணக்குகளை யாரோ தொடங்கி அதில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அப்பெண் குறித்து தவறான ஆபாச கருத்துக்களுடன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , வழக்கில் சம்பந்தப்பட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கணபதி ( வயது 30 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கணபதி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget