மேலும் அறிய

சங்கரன்கோவில் : ஆசிரியர் திட்டியதாக கடிதம்.. கல்லூரி மாணவி தற்கொலை.. தீவிர விசாரணை..

கணவர் கணேசன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது மகளை பீடி தொழில் செய்து படிக்க வைத்து வருகிறார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிந்தாமணி, இங்கு வசித்து வருபவர் மாடத்தி, இவருக்கு இந்து பிரியா என்ற 19 வயது மகள் உள்ளார். மாடத்தியின் கணவர் கணேசன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது மகளை பீடி தொழில் செய்து படிக்க வைத்து வருகிறார்.  இந்து பிரியா  புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு (B.Com) பயின்று வருகிறார்.. 


சங்கரன்கோவில் : ஆசிரியர் திட்டியதாக கடிதம்.. கல்லூரி மாணவி தற்கொலை.. தீவிர விசாரணை..

இந்நிலையில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று  இந்து பிரியாவின் உடன் பயிலும் மாணவி கல்லூரிக்கு செல்ஃபோன் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.  கல்லூரியில் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லாத நிலையில் ஆசிரியருக்கு தெரியாமல் செல்ஃபோன் பயன்படுத்தியது ஆசிரியருக்கு தெரிய வந்து உள்ளது. இது குறித்து தகவலறிந்த கல்லூரி ஆசிரியர்கள் இந்து பிரியாவை கண்டித்து மன்னிப்பு கடிதம் எழுதி தர வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்றிரவு தனது தாயாரிடம் கல்லூரியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து மனவேதனையுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் மாடத்தி வெளியில் சென்ற நேரம் பார்த்து இந்து பிரியா வீட்டினுள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் மாடத்தி வந்து பார்த்தபோது பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார்.. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இந்து பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சங்கரன்கோவில் : ஆசிரியர் திட்டியதாக கடிதம்.. கல்லூரி மாணவி தற்கொலை.. தீவிர விசாரணை..

மேலும் இந்து பிரியா தற்கொலை செய்வதற்கு முன் தன் கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் கல்லூரி ஆசிரியர்களான முத்துமணி, வளர்மதி ஆகிய இருவரும் கல்லூரியை விட்டு போகவேண்டும் என்றும் தான் ஒரு தவறும் செய்யவில்லை என்றும், இனி வரும் காலங்களில் கல்லூரிக்கு பயில வரும் மாணவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் எனவும் எழுதி உள்ளார். மேலும் செல்ஃபோன் கொண்டு வந்த மாணவியை கண்டிக்காமல் என்னை வகுப்பறையில் அனைத்து மாணவர்கள் முன்பும் திட்டி விட்டனர். செய்யாத தப்பை ஒத்துக்கொள்ள சொல்கின்றனர்.  மிகவும் கஷ்டமாக  உள்ளது, நீ வளர்த்த பொண்ண மேனர்ஸ் இல்லன்னு சொல்லிடாங்க அம்மா என உருக்கமாக எழுதி இருந்தார்.

இதனையடுத்து  கடிதத்தை கைப்பற்றிய மாணவியின் உறவினர்கள் அதனை புளியங்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.  இதனையடுத்து கல்லூரி வளாகத்திற்கு சென்ற காவல்துறையினர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்கள் இன்று கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படும் நிலையில் காவல்துறையினர் கல்லூரியில் பிற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget