மேலும் அறிய

புதுச்சேரியில் ₹90 கோடி ஆன்லைன் மோசடி: சீன தொடர்பு! 7 பேர் கைது, அதிர்ச்சி தரும் பின்னணி!

500 வங்கிக் கணக்குகள் மூலம் ₹90 கோடி அளவில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக 7 பேரை புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி: 500 வங்கிக் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் ரூ.90 கோடி மோசடி செய்தது தொடா்பாக சென்னையை சேர்ந்த கணேஷ் உடள்பட 7 பேரை கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

500 வங்கிக் கணக்குகள் மூலம் ₹90 கோடி அளவில் ஆன்லைன் மோசடி

புதுச்சேரி மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 500 வங்கிக் கணக்குகள் மூலம் ₹90 கோடி அளவில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக, சென்னையைச் சேர்ந்த கணேஷ் உட்பட 7 பேரை புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தக் குற்றவாளிகள் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இணையவழி குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது, இது நாட்டின் எல்லைகளைத் தாண்டிய மிகப்பெரிய மோசடிச் சங்கிலியை வெளிப்படுத்தியுள்ளது

இது குறித்து சைபர் கிரைம் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

புதுச்சேரியில் தனியாா் பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ், ஜெயபிரதாப் இருவரும் தங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுடன் படிக்கும் மாணவா் ஹரிஷ் 6 மாதங்களுக்கு முன்பு வங்கிக் கணக்கையும், சிம் காா்டுகளையும் வாங்கியதாகவும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த வங்கி கணக்குகளை ஆராய்ந்தபோது, அவை மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களில் முடக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அதே கல்லுாரியில் படிக்கும் மாணவரான கடலுாரை சேர்ந்த ஹரிஷ் (21), கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு வங்கி கணக்குக்கு தலா ரூ.2,500 தருவதாக கூறியதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு ஹரிஷிடம் வங்கி கணக்கு தொடங்கியதோடு, சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஹரிஷிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த இருவா் மட்டுமின்றி 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் வங்கிக் கணக்கைப் பெற்றுக் கொண்டு ஒரு வங்கிக் கணக்குக்குக் ரூ.1,500 வீதம் பெற்றுக் கொண்டு புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த கோவிந்தராஜிடம் கொடுத்ததாகக் கூறினாா்.

அதன்பேரில், போலீஸாா் கோவிந்தராஜை கைது செய்து விசாரித்தபோது, அவர் சென்னையில் கணேஷ் (33) என்பவரை சுட்டிக் காட்டி அவரிடம் வங்கி கணக்குகளை ஒப்படைக்கும் வேலையை செய்து வந்ததாகவும், கணேஷ் கொடுக்கும் ஏடிஎம்.கார்டுகளை பயன்படுத்தி நாள்தோறும் ரூ.4 முதல் ரூ.10 லட்சம் வரை பணம் எடுத்து கொடுத்து வந்துள்ளார். கடந்த 8 மாதத்தில் ரூ.8 கோடி வரை ஆன்லைன் மோசடி மூலம் பணம் எடுத்து கொடுத்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து கணேஷை போலீஸாா் சென்னையில் கைது செய்தனா். மேலும், அவா் அளித்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த யஷ்வின்(20), கடலுார், நடுவீரப்பட்டை சேர்ந்த ஐயப்பன்(24), சென்னை, அண்ணா நகரை சேர்ந்த தாமஸ் (29) (எ) ஹயக்ரீவா, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராகுல்(23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இவா்களிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், நூற்றுக்கணக்கான வங்கி கணக்குப் புத்தகங்கள், 20 கைப்பேசிகள், கணினி, 2 லேப்-டாப், சிம் காா்டுகள், 75 ஏடிஎம் கார்டுகள், பணம் எண்ணும் இயந்திரம் 1, 12 க்யூஆா் ஸ்கேனா், போலி நிறுவன முத்திரைகள், காா் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவா்களின் 251 வங்கிக் கணக்குகளை ஆராயப்பட்டது.

இந்தியா முழுவதும் 89 புகாா்கள் பதிவாகியுள்ளது தெரிய வந்தது. மேலும், ரூ.90 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மோசடியாக பெற்ற பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி சீனா, அயர்லாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அனுப்பி, நாடுகளுக்கு டிஜிட்டல் டாலராகவும் இவா்கள் பணப் பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா் செய்யப்பட்டு புதுச்சேரி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை இரவு அடைக்கப்பட்டனா் என இணையவழி குற்றப்பிரிவு போலீஸ் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
Top 10 News Headlines:  811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: 811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
Top 10 News Headlines:  811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: 811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
Embed widget