மேலும் அறிய

திருச்சி அருகே விவசாய சங்க செயலாளர் கொலை - 5 பேர் கைது

தப்பிச்சென்ற, 3 பேருக்கும் அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் ஆகியோர் பாதுகாப்பு வழங்கி, கொலைச் சம்பவத்தை மறைக்க உறுதுணையாக இருந்ததுள்ளனர்.

திருச்சி அருகே விவசாய சங்க செயலாளரை கொடூரமாக வெட்டிக்கொன்ற 5 பேரை  போலீசார்  அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் சாய்பாபா கோவில் அருகே வசித்து வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60). இவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தில் நிர்வாகியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சங்கத்தில் இருந்து விலகி தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி விட்டது. முதல் மனைவி இறந்து விட்டதால் சண்முகசுந்தரம் சிறுகனூர் அருகே உள்ள வங்காரத்தைச் சேர்ந்த வளர்மதி (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரத்திற்கும், வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வளர்மதி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் கணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சண்முகசுந்தரம் மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முந்தினம் அதிகாலையில் மர்ம நபர்கள் அரிவாளால் சண்முகசுந்தரத்தை வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.


திருச்சி அருகே விவசாய சங்க செயலாளர் கொலை - 5 பேர் கைது

மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவுச் செய்து, 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி மாநகரத்தில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த, 17 வயது மாணவன் ஒருவன் சரணடைந்தார். அந்த சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக சனமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், சண்முகசுந்தரத்தின் உறவினருமான அறிவழகன், அவரது தம்பி பால்ராஜ், அறிவழகனின் சகோதரி மகன் சண்முகவேல், இவரது நண்பர்கள் இளவரசன் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த, 2006ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு வரை, அறிவழகன் சனமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது, பஞ்சமி நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சண்முகசுந்தரம் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் குடும்பம் உள்பட சுமார், 20 குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டிற்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் அதற்கு சண்முகசுந்தரம் தடையாக இருந்து வந்திருக்கிறார்.


திருச்சி அருகே விவசாய சங்க செயலாளர் கொலை - 5 பேர் கைது

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீருக்காக அறிவழகன் உள்ளிட்ட கிராம மக்கள் சொந்த செலவில் போர்வெல் அமைக்க திட்டமிட்டு, எந்திரத்தின் மூலம் போர்வெல் போட்டுள்ளனர். இதனை அறிந்த சண்முகசுந்தரம், போர்வெல் போடும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அறிவழகனின் சகோதரி மகன், வாத்தலையை சேர்ந்த சண்முகவேல் அவரது நண்பர்களான புள்ளம்பாடி அருகே உள்ள திரணிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளவரசன், 17 வயது சிறுவன் ஆகிய, 3 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று இரவு சண்முகசுந்தரம் வீட்டிற்கு சென்று அரிவாள், வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தப்பிச்சென்ற, 3 பேருக்கும் அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் ஆகியோர் பாதுகாப்பு வழங்கி, கொலைச் சம்பவத்தை மறைக்க உறுதுணையாக இருந்ததுள்ளனர். மேலும், சிறுவனை கொலையில் ஈடுபடுத்தியதும், அவனை சிறுவன் சீர்திருத்த நீதிமன்றத்தில் சரண்டைய செய்ததிலும் இவர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, கொலை வழக்கில், சிறுவன் உள்ளிட்ட, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிறுகனூர் போலீசார், சண்முகவேல், இளவரசன், அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் ஆகியோரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget