மேலும் அறிய

திருச்சி அருகே விவசாய சங்க செயலாளர் கொலை - 5 பேர் கைது

தப்பிச்சென்ற, 3 பேருக்கும் அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் ஆகியோர் பாதுகாப்பு வழங்கி, கொலைச் சம்பவத்தை மறைக்க உறுதுணையாக இருந்ததுள்ளனர்.

திருச்சி அருகே விவசாய சங்க செயலாளரை கொடூரமாக வெட்டிக்கொன்ற 5 பேரை  போலீசார்  அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் சாய்பாபா கோவில் அருகே வசித்து வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60). இவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தில் நிர்வாகியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சங்கத்தில் இருந்து விலகி தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி விட்டது. முதல் மனைவி இறந்து விட்டதால் சண்முகசுந்தரம் சிறுகனூர் அருகே உள்ள வங்காரத்தைச் சேர்ந்த வளர்மதி (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரத்திற்கும், வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வளர்மதி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் கணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சண்முகசுந்தரம் மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முந்தினம் அதிகாலையில் மர்ம நபர்கள் அரிவாளால் சண்முகசுந்தரத்தை வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.


திருச்சி அருகே  விவசாய சங்க செயலாளர் கொலை -  5 பேர் கைது

மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவுச் செய்து, 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி மாநகரத்தில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த, 17 வயது மாணவன் ஒருவன் சரணடைந்தார். அந்த சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக சனமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், சண்முகசுந்தரத்தின் உறவினருமான அறிவழகன், அவரது தம்பி பால்ராஜ், அறிவழகனின் சகோதரி மகன் சண்முகவேல், இவரது நண்பர்கள் இளவரசன் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த, 2006ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு வரை, அறிவழகன் சனமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது, பஞ்சமி நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சண்முகசுந்தரம் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் குடும்பம் உள்பட சுமார், 20 குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டிற்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் அதற்கு சண்முகசுந்தரம் தடையாக இருந்து வந்திருக்கிறார்.


திருச்சி அருகே  விவசாய சங்க செயலாளர் கொலை -  5 பேர் கைது

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீருக்காக அறிவழகன் உள்ளிட்ட கிராம மக்கள் சொந்த செலவில் போர்வெல் அமைக்க திட்டமிட்டு, எந்திரத்தின் மூலம் போர்வெல் போட்டுள்ளனர். இதனை அறிந்த சண்முகசுந்தரம், போர்வெல் போடும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அறிவழகனின் சகோதரி மகன், வாத்தலையை சேர்ந்த சண்முகவேல் அவரது நண்பர்களான புள்ளம்பாடி அருகே உள்ள திரணிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளவரசன், 17 வயது சிறுவன் ஆகிய, 3 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று இரவு சண்முகசுந்தரம் வீட்டிற்கு சென்று அரிவாள், வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தப்பிச்சென்ற, 3 பேருக்கும் அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் ஆகியோர் பாதுகாப்பு வழங்கி, கொலைச் சம்பவத்தை மறைக்க உறுதுணையாக இருந்ததுள்ளனர். மேலும், சிறுவனை கொலையில் ஈடுபடுத்தியதும், அவனை சிறுவன் சீர்திருத்த நீதிமன்றத்தில் சரண்டைய செய்ததிலும் இவர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, கொலை வழக்கில், சிறுவன் உள்ளிட்ட, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிறுகனூர் போலீசார், சண்முகவேல், இளவரசன், அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் ஆகியோரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Embed widget