![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime: கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் எரித்துக்கொலை - பட்டப்பகலில் பயங்கரம்!
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் எரித்துக்கொலை - பட்டப்பகலில் பயங்கரம்! 4 people committed suicide near cuddalore Crime: கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் எரித்துக்கொலை - பட்டப்பகலில் பயங்கரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/08/f54056d0024b697a7250db1c7599e3711675839801993572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் வெள்ளிபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் பிரகாஷ் -தமிழரசி தம்பதியினர்
இவர்களுக்கு ஷாசினி என்ற 8 மாத கைக்குழந்தை உள்ளது. இதனிடையே தமிழரசியின் அக்காவான தனலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் சற்குருவை விட்டு விட்டு சகோதரியான தமிழரசி வீட்டிற்கு தனது 4 மாத கைக்குழந்தையுடன் வந்து தங்கியுள்ளார்.
இதற்கிடையில் சற்குரு தமிழரசி வீட்டுக்கு வந்து தனலட்சுமியிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சற்குரு தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து தன் மீதும், தனலட்சுமி மற்றும் அவரது 4 மாத கைக்குழந்தை மீதும் ஊற்றி எரித்துள்ளார். அக்கா எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழரசி இதனை தடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசியின் 4 மாத கைக்குழந்தை மீதும் தீப்பற்றியது.
இந்த சம்பவத்தில் சற்குரு, தனலட்சுமி, 8 மாத கைக்குழந்தை மற்றும் 4 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த தமிழரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)