மேலும் அறிய

தி.மலை: அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! ஏரியில் குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

கலசப்பாக்கம் அருகே ஏரியில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.  இவருடைய மகன்கள் அருள் வயது (10), அஜித் வயது (9), சந்திப் வயது (7). அருள் 5-ம் வகுப்பும், அஜித் 4-ம் வகுப்பும், சந்திப் 2-ம் வகுப்பும் லாடவரம் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு ஒரே மகன் ஜீவன் குமார் வயது (8). இவன் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் வீட்டில் இருந்து நான்கு பேரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளியில் இருந்து 4 மாணவர்களும்  வீட்டுக்கு வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து  4 பேரும் வீட்டிற்கு வரும் வழியில் நாம் அனைவரும் ஏரிக்கு குளிக்க செல்லாம் என்று பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.

 


தி.மலை: அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! ஏரியில் குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

அதனைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து அதேப் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் ஒரு மாணவன் பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவனை  காப்பாற்றுவதற்காக முயன்றுள்ளனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக நான்கு பேரும் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.

அவர்களில் அஜித் என்ற மாணவன் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி கூச்சல் போட்டு உள்ளார். இதனைக்கேட்ட  அப்பகுதியை  சேர்ந்த ஒருவர் அஜித்தை மீட்டு உள்ளார். மீட்கப்பட்ட அஜித் பயந்து உடனடியாக வீட்டிற்கு ஓட்டியுள்ளார். மற்றவர்கள் தண்ணீரில் மூழ்கியது தெரியாததால் அஜித்தை மீட்டவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். இரவு 7 மணிக்கு மேல் ஆகியும்  அருள், சந்தீப், ஜீவன்குமார் ஆகிய மூன்று  மாணவர்களும் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடத் தொடங்கினர். அப்போது தான் அந்த மூன்று மாணவர்களும் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் போளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 


தி.மலை: அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! ஏரியில் குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

 தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய அருள், அவனது தம்பி சந்திப் மற்றும் ஜீவன் குமார் ஆகிய மூன்று பேரையும் சடலமாக மீட்டனர். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த 3 மாணவர்களின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெங்கநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் விவசாயத்திற்கு ஏரியில் வண்டல் மண் எடுக்க அளிக்கப்பட்ட அனுமதியை பயண்படுத்தி சில கட்சி பிரமுகர்கள் அதிக அளவில் ஆழமாகவும் வண்டல் மண் அள்ளி மண்னை செங்கல் சூளைக்கு பயண்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏரிகயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதிக அளவில் தோண்டப்பட்ட இடத்தை அறியாத மாணவர்கள் அதில் மாட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget