மேலும் அறிய

ரயில் மோதி விபத்து: தூக்கி வீசப்பட்ட 3 சிறுவர்கள் பலி..! சென்னையில் சோகம்

Train Accident : சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்

சென்னை அடுத்த ஊரப்பாக்கம்  பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்

 

 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம்


கர்நாடக மாநிலம்  தொப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சஞ்சம் பண்ணன்,  இவரது இளைய சகோதரர் அனுமந்தப்பா  ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.  இவர்கள் சென்னை புறநகர் பகுதியில் அனுமன்,  ராமர் உள்ளிட்ட வேடங்களை போட்டுக் கொண்டு  யாசகம்   தொழிலாக வைத்து வந்துள்ளனர்.  20 வருடங்களுக்கு மேலாக, இவர்கள் தமிழ்நாட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.   தற்பொழுது இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம்  வண்டலூர் அடுத்துள்ள  ஊரப்பாக்கம் பகுதியில்  உள்ள செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில்  தங்கள் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.


ரயில் மோதி விபத்து: தூக்கி வீசப்பட்ட 3  சிறுவர்கள் பலி..! சென்னையில் சோகம்

 மாற்றுத்திறனாளி சிறுவர்கள்

இதில்  சஞ்சம் பண்ணன்   என்பவருக்கு  15 வயதில் சுரேஷ் என்ற மகனும் 10 வயதில் ரவி என்ற மகனும் உள்ளனர். இதில் சுரேஷ் என்ற சிறுவன் காது கேட்காத  மாற்றுத்திறனாளி,  அதே போன்று ரவி என்ற  சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அனுமந்தப்பாவிற்கு மஞ்சுநாத் ( வயது 11 ) என்ற மகனும் உள்ளனர்.  சிறுவர்கள் மூன்று பேரும் கர்நாடக மாநிலத்தில் தங்களது, பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கல்வி பயின்று வருகின்றனர்.



ரயில் மோதி விபத்து: தூக்கி வீசப்பட்ட 3  சிறுவர்கள் பலி..! சென்னையில் சோகம்


ரயில் மோதி விபத்து

 தற்பொழுது பள்ளி தொடர் விடுமுறை நாட்கள் என்பதால்  தாய் தந்தையுடன் விடுமுறை செலவு செய்வதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஊரப்பாக்கம் வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் ஊரப்பாக்கம் அருகே  ரயில்வே தண்டவாளத்தின், அருகே விளையாடிக் கொண்டிருந்த, ரயில்வே தண்டவாளத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் 3 சிறுவர்கள் மீது மோதி உள்ளது.

தூக்கி வீசப்பட்ட 3  சிறுவர்கள் பலி


மூன்று சிறுவர்களும் அங்கிருந்து தூக்கி  வீசப்பட்டுள்ளனர். கொடூரமாக நடைபெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், அருகே இருந்த பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி  உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசாரம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ரயில் மோதி விபத்து: தூக்கி வீசப்பட்ட 3  சிறுவர்கள் பலி..! சென்னையில் சோகம்

 

 தொடரும் ரயில் விபத்து

சென்னை புறநகர் பகுதிகளில் அவப்பொழுது, இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாம்பரத்திலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரையில் உள்ள, ரயில்வே தண்டவாளம் பகுதியில் இந்த விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதிகளவு குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் , பொதுமக்கள் பலரும்  தடியை மீறி ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதால், இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைத்து , பொதுமக்கள் சென்று வர வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Embed widget