மேலும் அறிய

Crime: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

பெரணமல்லூர் அருகே கள்ளக்காதலுனுடன் கைகோர்த்து கணவனை கொலை செய்த மனைவி உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கடுகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமி காந்தன் வயது (43) இவருடைய மனைவி ராஜேஸ்வரி வயது (31). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரம் முன்பு லட்சுமி காந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் வெளியே சென்ற லட்சுமி காந்தன் திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து இவர்கள் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் உள்ள புதரில் காயத்துடன் சடலமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம மக்கள் பெரணமல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். செய்யார் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆய்வாளர் நந்தினி தேவி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 


Crime: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது
இதுகுறித்து காவல்துறையினர் செய்யார் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் ராஜேஸ்வரி திருமணத்திற்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரை காதலித்து இருந்தார். இருவரும் காதலித்த நிலையில், பெற்றோர், உறவினர் லட்சுமி காந்தனுக்கு ராஜேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும் சிவகுமார் ராஜேஸ்வரியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். லட்சுமிகாந்தன் குடிப்பழக்கம் உள்ளவர். இதனால் ராஜேஸ்வரி செய்யார் சிப்காட் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அங்கே சூப்பர்வைசராக வேலை செய்யும் வெண்பாக்கம் தாலுகாவை சேர்ந்த கனகம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் உதயசூரியனுடனும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

 


Crime: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

 

இதனால் ராஜேஸ்வரி சிவகுமாரிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் நான் தான் ராஜேஸ்வரியின் கணவர் என்று கூறி ராஜேஸ்வரி வேலை செய்யும் சூ கம்பெனிக்கு சென்று உதயசூரியன் ராஜேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவர்கள் மீது புகார் செய்தார். இதுகுறித்து நிர்வாகம் இருவரையும் வேலை விட்டு நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேஸ்வரி உதயசூரியனை வற்புறுத்தினார். அதற்கு உதயசூரியன் உன் கணவனை  தீர்த்து கட்டிவிட்டு நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். இது குறித்து இவர்கள் இருவரும் கலந்து ஆலோசித்து கடந்த வாரம் உதயசூரியன் மற்றும் அவருடைய மைத்துனர் பாண்டியன்  ஆகிய இருவரும் லட்சுமி காந்தனுடன் மது குடிக்க வயல்வெளிக்கு அழைத்து சென்றனர்.

 

 


Crime: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

அங்கு லட்சுமி காந்தனை கழுத்து நெரித்தனர். இருப்பினும் சந்தேகம் தீரவில்லை என்று கையில் இருந்த கத்தியால் லட்சுமி காந்தின் கழுத்தை அறுத்தனர். பின்னர் அருகாமையில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து செய்யார் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தூசி ஆய்வாளர் குமார், ஆய்வாளர் நந்தினி தேவி ஆகியோர் கொலையாளிகள் மூன்று பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் சம்பவத்தால் கணவனையே கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.