மேலும் அறிய

Crime: துண்டு துண்டாக தாயை வெட்டிக் கொன்ற மகள்.. 3 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை.. சிக்கியது எப்படி?

மும்பையில்   24 வயது பெண்  ஒருவர் தனது தாயை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து மறைத்து வைத்திருந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. 

மும்பையில்   24 வயது பெண்  ஒருவர் தனது தாயை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து மறைத்து வைத்திருந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. 

மத்திய மும்பையில் உள்ள  லால்பாக் பகுதியில்  வீணா என்ற பெண்ணை கடந்த 3 மாதங்களாக காணவில்லை என கூறி அவரது சகோதரர் கலாசௌகி காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வீணாவின் மகளான 24 வயது பெண் ரிம்பிள் ஜெயின் முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்தார். 

இதனால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டை சோதனை செய்தபோது முதலில் ஒரு தொட்டியில் கை மற்றும் கால்களை கண்டனர். அதனைத் தொடர்ந்து  கைது செய்தனர். மேலும் ரிம்பிள் ஜெயின் இருந்த வீட்டை சோதனை செய்ததில்  வீணாவின் உடல் துண்டு துண்டாக வெட்டி அலமாரியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனிடையே ரிம்பிள் ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் ரிம்பிள் கொலை செய்துள்ளார் என்றும், வீணாவின் உடலை கத்தி, மின்சார அறுவை இயந்திரம் உள்ளிட்டவை கொண்டு வெட்டியுள்ளார். மேலும் வீட்டினுள் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க 200 க்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் மற்றும் ஏர் ஃப்ரெஷனர்களைப் ரிம்பிள் பயன்படுத்தியுள்ளார். 

அதேசமயம் பக்கத்து வீட்டுக்காரர் வீணாவைப் பற்றி ரிம்பிளிடம் கேட்டபோது, அவர் கான்பூருக்கு சென்றுள்ளதாகவும், வர தாமதமாகும் என சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார். உறவினர்களிடம் தொடர்பை துண்டித்த ரிம்பிள் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் போது அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் பற்றி புகார் தெரிவிக்க, அருகிலிருந்த மருந்தகத்தில் இருந்து பெறப்பட்ட வாசனை திரவியத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளார்.

அதன்பின்னர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் உணவையும் வீட்டிலிருந்து ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் வீணாவின் உறவினர் பணம் கொடுக்க வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் கதவை இலேசாக திறந்த ரிம்பிள் கையை மட்டும் நீட்டியுள்ளார். வீணா எங்கே என கேட்டதற்கு, கான்பூருக்குப் போயிருக்கிறார் என ரிம்பிள் சொல்லியிருக்கிறார். இதில் ஏதோ தவறு  உள்ளது என்பதை கண்டறிந்த உறவினர், மற்றொரு உறவினரை அழைத்து வந்த ரிம்பிள் கதவை திறக்க மறுத்துள்ளார். அதன்பிறகே போலீசாருக்கு புகார் சென்று உண்மையான நிலவரம் வெளிவந்துள்ளது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget