சுற்றுலா வந்த இஸ்ரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! மர்ம கும்பல் அட்டூழியம்! என்ன நடந்தது?
கர்நாடக மாநிலம் ஹம்பியில் சுற்றுலா வந்த இஸ்ரேலிய பெண்ணும் அவரது பணிப்பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹம்பியில் சுற்றுலா வந்த இஸ்ரேலிய பெண்ணும் அவரது பணிப்பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு பெண்களும் 3 ஆண் நண்பர்களுடன் துங்கபத்ரா அணைக்கட்டுக்கு சென்றிருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடகாவில் வியாழக்கிழமை இரவு மூன்று ஆண்களால் 27 வயது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மற்றும் ஒரு தங்கும் விடுதி உரிமையாளர் ஆகிய இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவை சேர்ந்த பங்கஞ், ஒடிசாவை சேர்ந்த பிபாஷ் ஆகியோருடன் இஸ்ரேலிய பெண் ஒருவர் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது பெங்களூரு தொழில்நுட்ப மையத்திலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ள கொப்பலில் உள்ள ஒரு கால்வாயின் அமைதியான கரையில் அவர்கள் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கும்பல் 3 ஆண் நண்பர்களையும் கால்வாயில் தள்ளிவிட்டுவிட்டு இரண்டு பெண்களையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பங்கஜ் என்ற பயணி நீந்தி வெளியேறிய நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த பிபாஷ் நீரில் மூழ்கி இறந்தார். அவரது உடல் சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.
"குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில், இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம், மேலும் இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கொப்பல் காவல் கண்காணிப்பாளர் ராம் எல் அரசிட்டி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அரசு மருத்துவமனையில் குணமடைந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் "சனபூர் அருகே இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் என ஐந்து பேர் தாக்கப்பட்டனர். அவர்களில் இருவர் வெளிநாட்டினர். ஒரு அமெரிக்கர். மற்றொருவர் இஸ்ரேலைச் சேர்ந்த பெண். தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இரண்டு பெண்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவித்தனர்.
தனது புகாரில், 29 வயதான ஹோம்ஸ்டே உரிமையாளர், தானும் நான்கு விருந்தினர்களும் இரவு உணவிற்குப் பிறகு துங்கபத்ரா இடது கரை கால்வாயின் கரையில் நட்சத்திரங்களைப் பார்க்கச் சென்றிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பைக்கில் வந்ததாகக் கூறினார்.
முதலில் பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று கேட்ட அவர்கள், பின்னர் பயணிகளிடம் ரூ.100 கேட்டு மிரட்டினர். மறுக்கப்பட்டதால், பயணிகளைத் தாக்கி, ஆண்களை கால்வாயில் தள்ளி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. குற்றத்தைச் செய்த பிறகு அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
காணாமல் போன சுற்றுலாப் பயணியை தீயணைப்பு அதிகாரிகளும் காவல்துறையின் மோப்ப நாய்களும் தேடி வந்தனர். பின்னர் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
பிபாஷைத் தேடுவதற்காக தீயணைப்பு அதிகாரிகளும் காவல்துறையின் நாய் படையும் நேற்று அனுப்பப்பட்டன. இன்று காலை அவரது உடல் கால்வாயின் கரையில் கண்டெடுக்கப்பட்டது.
பெண்கள் அரசு மருத்துவமனையில் குணமடைந்து வருகின்றனர், ஆனால் அவர்கள் விரும்பினால் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று போலீசார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

