மேலும் அறிய

அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..

துபாயில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.1.5 கோடி மதிப்புடைய, 2.2 கிலோ கடத்தல் தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்கச் சோதனையில் இல்லாமல், தங்கத்தை வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேரை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரகசிய தகவல்

துபாயிலிருந்து சென்னைக்கு, தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவு , துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட விமான பயணிகளை, தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் தீபக் (30) உட்பட இரண்டு ஊழியர்கள், கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை டிராலி டைப் இயந்திரத்தில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தனர்.

இரண்டு கிலோ தங்கம் பறிமுதல்

அவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதோடு கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை சோதனை செய்தனர். அந்தக் கருவிகளுக்குள், 3 சிறிய பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவைகளை அதிகாரிகள் எடுத்து பிரித்துப் பார்த்தபோது, தங்கப் பசைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மூன்று பார்சல்களிலும் 2.2 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி.இதை அடுத்து, ஒப்பந்த ஊழியர்கள் தீபக் உட்பட இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். 

தங்க பசை

அப்போது துபாயிலிருந்து இலங்கை செல்லும் டிரான்சிட் பயணி ஒருவர், இந்த தங்கம் பசை அடங்கிய பார்சல்களை கடத்திக் கொண்டு வந்து, விமான நிலைய கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து , அவர் மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு சென்று விட்டார். 

அந்த கடத்தல் பயணி ஏற்கனவே, விமான நிலைய ஒப்பந்த ஊழியர் தீபக்கிடம், கூறியிருந்ததால், தீபக் தனது வழக்கமான காலை பணி நேரத்தை, இரவு பணி நேரமாக மாற்றி அமைத்துக் கொண்டு, முன்னதாகவே பணிக்கு வந்து, கழிவறையில் இருந்த தங்கப் பசை பார்சல்களை எடுத்து, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் செல்ல முயன்றபோது பிடிபட்டார் என்று தெரியவந்தது. 

இருவர் கைது

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், தீபக் உள்ளிட்ட இரு ஒப்பந்த ஊழியர்களையும், சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில், 267 கிலோ கடத்தல் தங்கம்,டிரான்சிட் பயணிகளால் கடத்திக் கொண்டுவரப்பட்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், தற்போது அதே பாணியில் , மேலும் ரூ.1.5 கோடி மதிப்புடைய, 2.2 கிலோ கடத்தல் தங்கம், சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்து செல்ல முயன்ற, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து.. 2 பேர் உயிரிழந்த சோகம்..
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து.. 2 பேர் உயிரிழந்த சோகம்..
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
Nalla Neram Today Sep 12: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget