மேலும் அறிய

Cryptocurrency : கிரிப்டோகரன்ஸி குறித்த சமீபத்திய அறிவிப்பு என்ன..? இதோ ! முழு விவரம்..

ஒரு முதலீட்டின் மீது எந்த வருமானமும் இருக்காது. அடுத்து வரும் முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று முந்தைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பத்துதான் பொன்ஸி திட்டம் என அழைக்கலாம்.

கிரிப்டோகரன்ஸிகளுக்கான 30 சதவீத வரியை முக்கியமான அறிவிப்பாக பலரும் கருதுகின்றனர். ஒரு தரப்பினர் கிரிப்டோவுக்கு அதிகபட்ச வரி விதிப்பு இருப்பதால் கிரிப்டோவில் செல்லும் முதலீடு குறையும் என கருதுகின்றனர். ஆனால் கிரிப்டோகரன்ஸி தரப்பினர், வரி விதிப்பு மூலமாக அரசு கிரிப்டோ முதலீடுகளை அங்கிகரித்திருக்கிறது என உற்சாகம் அடைந்திருக்கின்றனர். இதன் மூலம் பல கிரிப்டோ கரன்ஸிகள் உருவாகும் என என்னும் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த துறையினர் என்ன சொல்லுகிறார்கள் என்பதை விட, சமீபத்திய அறிவிப்பு என்ன என்பதை பார்த்துவிடுவோம்.


Cryptocurrency : கிரிப்டோகரன்ஸி குறித்த சமீபத்திய அறிவிப்பு என்ன..? இதோ ! முழு விவரம்..

கிரிப்டோ சொத்துகள் மீது கிடைக்கும் லாபத்துக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இதர சொத்துகளில் மூலம் நஷ்டங்களை இதில் கிடைக்கும் லாபத்துடன் சரி கட்ட முடியாது. உதாரணத்துக்கு இரு  பங்குகளில் முதலீடு செய்கிறார். ஒரு பங்கில் லாபம் கிடைக்கிறது. அதேபோல மற்றொரு பங்கில் நஷ்டம் வருகிறது என்னும் பட்சத்தில் நிகர லாபத்துக்கு மட்டுமே வரி செலுத்தினால் போதுமானது. ஆனால் கிரிப்டோவில் கிடைக்கும் லாபத்துக்கு 30 சதவீத வரி செலுத்தியாக வேண்டும். இதர முதலீட்டில் கிடைக்கும் நஷ்டத்துடன் சரி கட்ட முடியாது. அதேபோல கிரிப்டோ பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும். மேலும் கிரிப்டோ கரன்ஸியை பரிசாக வழங்கும் பட்சத்தில், இந்த பரிசை பெறுபவர் பரிசை பெறுபவர் வரி செலுத்த வேண்டும்.

இதற்காக விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம். இருந்தாலும் அதற்கு முன்பு இந்த சொத்தில் லாபம் அடையும் முதலீட்டாளர்களுக்கு வரி வசூலிக்க வேண்டும் என நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் சுமார் 2 கோடி கிரிப்டோ கரன்ஸி முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். சுமார் 40000 கோடி ரூபாய் அளவுக்கு கிரிப்டோகரன்ஸியில் முதலீடு இருக்கும் என தெரிகிறது.

இது தொடர்பாக ஜெரோதா நிறுவனத்தின் நிறுவனர் நிதின் காமத் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. கிர்ப்டோவை ஒரு கரன்ஸியாக அல்லாமல் அதனை ஒரு சொத்தமாக மட்டுமே அரசு அங்கிகரிப்பது வரவேற்கத்தக்கது. அதனால் டிமேட் கணக்கில் பங்குகள் இருப்பதுபோல கிரிப்டோ முதலிடும் இருக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக பிஎம்எஸ் பஸார் நிறுவனத்தின் நிறுவனர் பல்லவராஜனிடம் பேசினோம். இது தொடர்பாக விரிவாக பேசினார். ஒரு முதலீட்டாளர்களின் முக்கியமான விஷயம் லாபம். லாபத்துக்காகதான் முதலீடு செய்கிறார்கள். தற்போது பங்குகளை விட இரு மடங்குக்கு மேல் வரி இருப்பதால், கிரிப்டோவில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் முதலீட்டாளர்களுக்கு இருக்கும்.


Cryptocurrency : கிரிப்டோகரன்ஸி குறித்த சமீபத்திய அறிவிப்பு என்ன..? இதோ ! முழு விவரம்..

பங்குச்சந்தையை விட இரு மடங்குக்கு மேல் லாபம் கிடைத்தால்தான் கிரிப்டோ முதலீடு பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் வரி அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும். அதனால் கிரிப்டோவில் இருந்து பங்குச்சந்தை உள்ளிட்ட இதர முதலீட்டுகளுக்கு மாறும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி முதலீடு அடுத்த சொத்துகளுக்கு மாறும் பட்சத்தில் கிரிப்டோ மூலம் கிடைக்கும் வருமானமும், அதன் மீதான ஈர்ப்பும் குறைய வாய்ப்பு இருக்கிறது என பல்லவராஜன் தெரிவித்தார். லாபம் சம்பாதிக்க முடியாத அல்லது போதுமான அளவுக்கு லாபத்தை வெளியே எடுக்க முடியாத முதலீடு வளர்வதற்கான வாய்ப்பு குறைவு என்றார்.

இது பொன்ஸி திட்டமா?

ஒரு முதலீட்டின் மீது எந்த வருமானமும் இருக்காது. அடுத்து வரும் முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று முந்தைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பத்துதான் பொன்ஸி திட்டம் என அழைக்கலாம்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இதனை பொன்ஸி திட்டம் என பல அறிஞர்கள் கூறுகின்றனர். இதனை கரன்ஸி என்பதை ஏற்க முடியாது. இது ஒரு யூகம் ஒரு விளையாட்டு.  ஒரு கிரிப்டோவில் முதலீடு செய்கிறோம். பிடிக்கவில்லை என்றால் வேறு கிரிப்டோ முதலீட்டை உருவாக்கிக்கொள்ள முடியும். இதனை எப்படி கரன்ஸி என அழைக்க முடியும் என சர்வதேச அளவில் கேள்விகள் எழுகின்றன.


Cryptocurrency : கிரிப்டோகரன்ஸி குறித்த சமீபத்திய அறிவிப்பு என்ன..? இதோ ! முழு விவரம்..

கிரிப்டோகளை பணவீக்கத்துக்கு மாற்றாக பல முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். பணவீக்கத்துக்கும் கிரிப்டோவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்று இருக்கும் ஒரு கிரிப்டோ நாளை இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதால் பணவீக்கத்துக்கு எதிரான முதலீடு என ஒப்பிட்டு முதலீடு செய்ய  வேண்டாம் என சர்வதேச அளவில் பல வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வரி அறிவிப்பை அங்கீகாரமாக கருத வேண்டுமா அல்லது வளர்ச்சிக்கான தடையாக கருத வேண்டுமா? என்பதெல்லாம் அந்த துறையினருக்கானது. ஆனால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் களம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kerala Lottery Result Today LIVE: கேரள லாட்டரி அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரம்! ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியதா?
Kerala Lottery Result Today LIVE: கேரள லாட்டரி அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரம்! ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியதா?
Gold and silver rate today : திடீர் ட்விஸ்ட்... தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சரவனுக்கு எவ்வளவு தெரியுமா.?
திடீர் ட்விஸ்ட்... தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சரவனுக்கு எவ்வளவு தெரியுமா.?
Kerala Lottery Result Today LIVE: மாதத்தின் முதல் நாளில் பரிசு மழை பொழியுமா? உடனுக்குடன் லாட்டரி குலுக்கல்!
Kerala Lottery Result Today LIVE: மாதத்தின் முதல் நாளில் பரிசு மழை பொழியுமா? உடனுக்குடன் லாட்டரி குலுக்கல்!
Gold Silver Rate Mar.1st: 1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அரம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அரம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
Trump Vs Iran IRGC: “சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
“சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
DMK CONGRESS Alliance: 25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
Iran Prez. Masoud Pledge: “தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
“தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
Car Sale Feb 2026: கொம்பனாக ஒசந்து நிக்கும் மாருதி .. ஷாக் அடிக்கும் டாடா.. விற்பனையில் மிரட்டிய கார் மாடல்கள்
Car Sale Feb 2026: கொம்பனாக ஒசந்து நிக்கும் மாருதி .. ஷாக் அடிக்கும் டாடா.. விற்பனையில் மிரட்டிய கார் மாடல்கள்
Embed widget