Share Market : வாரத்தின் முதல் நாள்... ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...லாபத்தில் எஸ்பிஐ, ஐடிசி...
Share Market : இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி உள்ளது.
Share Market opened : இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 257.95 புள்ளிகள் உயர்ந்து 60,103.24 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 17,883.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
Sensex climbs 257.95 points to 60,103.24 in early trade; Nifty advances 77 points to 17,883.80
— Press Trust of India (@PTI_News) December 26, 2022
லாபம்-நஷ்டம்
ஹின்டல்கோ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, கோல் இந்தியா, ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி வங்கி, லார்சன், அதாணி போர்ட்ஸ், என்டிபிசி, யுபிஎல், ஓஎன்ஜிசி, எம்எம், டிசிஎஸ், மாருதி சிசிகி, பிரிட்டானியா, கிராசிம், ஹிரோ மோட்டோகோர்ப், டெக் மகேந்திரா, விப்ரோ, இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
சன்பார்மா, சிப்ளா, கோடக் மகேந்திரா, அப்போலோ மருத்துவமனை, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாயின் மதிப்பு
Rupee rises 3 paise to 82.79 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) December 26, 2022
இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 3 காசுகள் உயர்ந்து 82.79 ரூபாயாக உள்ளது.
சீனாவில் கொரோனா தாக்கம்
சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை 2023-ஆம் ஆண்டில் உருவாகும், அமெரிக்காவுக்கும் 2023-ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கிறது என்ற தகவலும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. மேலும் சீனாவில் கொரோனா வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் இன்னும் கொரோனா தாக்கம் குறையாதது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தையானது மந்த நிலையிலே இருந்தது.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.