மேலும் அறிய

Share market : சரிவை சந்தித்த ஐ.டி. நிறுவன பங்குகள்; பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு! இன்றைய நிலவரம்!

Share market Closing Bell: இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன.

Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றுடன் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்  224.4 அல்லது 0.4% புள்ளிகள் சரிந்து  59,502.7 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  50 அல்லது 0.4% புள்ளிகள் சரிந்து 17,596.2 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.

இந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்துள்ளன. ஐ.டி. நிறுவன பங்குகள் சரிவுடனும், உலோகங்களின் பங்குகள் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

பி.எல்.ஏ.எல்., டெக்ஸ்மோ பைப்ஸ், மிர்சா இன்டர்நேசனல், மனுகிராப் இந்தியா, அப்பல்லோ சிந்தூரி, படேல் இஞ்சினியரிங், மங்கலம் வேல்ட், பிரிசன் ஜான்சம், ஆர்பிட் எக்ஸ்போர்ட், திருபதி ஃப்ராஜ், நிர்மான் அக்ரி,கமத் ஹோட்டல், ரூபா கம்பேனி உள்ளிட்ட நிச்.சி.எல்.உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட், சி.எஸ்.பி. வங்கி, ஆர்.பி.எல். வங்கி, நிப்பான், ஹோம் ஃபர்ஸ்ட், மாரிகோ, இன்ஃபோ எட்ஜ், ஹெச்.சி.எல்., இந்தஸ்லேண்ட் வங்கி,இன்ஃபோசிஸ், ஆயில் இந்தியா, பிரிலா கார்ப்ரேசன், டாடா பவர், விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்.பி.ஐ. கார்ட், அதானி டிரான்ஸ், கனரா வங்கி, அசோக் லேலேண்ட், கரூர் வைசியா வங்கி  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.  

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம்:

அந்த விதத்தில், பங்கு சந்தையில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் தற்போது மெல்ல மெல்ல தெரிய வருகிறது. பங்கு சந்தையில் மின்னணு வடிவத்தில் பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய டிமேட் கணக்குகளே அதிகம் பயன்படுகிறது. எனவே, பங்கு சந்தை தரகர்கள் ஒவ்வொரு மாதமும் புதிய டிமேட் கணக்குகளைத் திறந்து வருகின்றனர். 

ஆனால், அதே நேரத்தில், பங்கு சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்கு சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக, கடந்த 9 மாதங்களில் பங்கு சந்தையில் இருந்து 53 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என தேசிய பங்கு சந்தையின் தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது.

 

தொடர்ந்து 9ஆவது மாதமாக, தேசிய பங்கு சந்தையின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேசிய பங்கு சந்தையில் 3.8 கோடி முதலீட்டாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 53 லட்சம் பேர் வெளியேறி உள்ளதால் அந்த எண்ணிக்கை 3.27 கோடியாக குறைந்துள்ளது.

இதை தவிர்த்து, பங்கு சந்தையில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு மூன்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில், பங்கு சந்தையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், தற்போது, பங்கு சந்தையில் மக்கள் வர்த்தகம் செய்வது ஒப்பிட்டளவில் குறைந்துள்ளது.

அறிகுறிகள்:

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு நிதியாண்டில், சில்லறை விற்பனை 49,200 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2021-22 நிதியாண்டில், சில்லறை விற்பனை 1.65 லட்சம் கோடி ரூபாயாகவும் 2020-21 நிதியாண்டில் 68,400 கோடி ரூபாயாகவும் இருந்தது.

மார்ச் 2023இல் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் தினசரி சராசரி வருவாய் 29% குறைந்து ரூ.23,700 கோடியாக பதிவானது.

கடைசியாக, புதிய டிமேட் கணக்குகள் பதிவு செய்யப்படும்  வேகம் குறைந்து வருகிறது. சேர்க்கப்பட்ட புதிய கணக்குகளின் எண்ணிக்கை, மாதந்தோறும் 8% குறைந்து 19 லட்சமாக உள்ளது.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம், கொரோனா பெருந்தொற்று என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், வீட்டில் இருந்து பணிபுரியும் முறை அதிகம் கடைபிடிக்கப்பட்டதால் இளைஞர்களுக்கு பங்கு சந்தை கவர்ச்சிகரமாக தென்பட்டதாகவும் ஆனால், தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் போக்கு குறைந்து வருவதால் பங்கு சந்தை மீது இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Post Office FD vs RD: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? FD vs RD - எந்த திட்டத்தில் அதிக லாபம்?
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? FD vs RD - எந்த திட்டத்தில் அதிக லாபம்?
LIVE | Kerala Lottery Result Today (22.07.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில பொன்னும் பொருளும் கொட்டுமா? இதோ முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (22.07.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில பொன்னும் பொருளும் கொட்டுமா? இதோ முடிவுகள்!
’மாணவர்களின் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய்’ தரும் நிறுவனம் இதுதான்..!
’மாணவர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முயற்சி’ 10 கோடி ரூபாய் தரும் நிறுவனம்..
Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..
ஒரே நாளில் சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget