மேலும் அறிய

தமிழக அரசின் பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர் ஆக அரிய வாய்ப்பு - ஏப்ரல் 10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

மயிலாடுதுறையில் பாரத்நெட் திட்டத்தின் கீழ் இணையச் சேவை வழங்க நிதித் தகுதி ரூ. 20 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 10-க்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டமான 'பாரத்நெட்' திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களுக்கு அதிவேக இணையச் சேவையைக் கொண்டு சேர்க்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) தீவிரப்படுத்தியுள்ளது. இத்தேர்விற்கான நிதித் தகுதி விதிமுறைகள் தற்போது பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக குறைப்பு

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் கடந்த 01.01.2026 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரி ஆண்டு வருவாயாக ரூ. 50 லட்சம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும், அதிகப்படியான உள்ளூர் தொழில்முனைவோர் இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தையும் கருத்தில் கொண்டு, இந்த நிதித் தகுதி தற்போது ரூ. 20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

100% பணிகள் நிறைவு

மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரை, பாரத்நெட் திட்டத்திற்கான உட்கட்டமைப்பு மற்றும் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் பணிகள் 100 சதவீதம் முழுமையாக நிறைவடைந்துள்ளன. தற்போது, பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் உயர்தர இணையச் சேவையை வழங்குவதை உறுதி செய்ய, தகுதியான தொழில் பங்கீட்டாளர்களைத் தேர்வு செய்யும் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்ட நிர்வாகத்தின் திட்டப்படி, மயிலாடுதுறை மாவட்டம் இரண்டு வருவாய் உட்கோட்டங்களாக (Revenue Divisions) பிரிக்கப்பட்டுள்ளது.

* மயிலாடுதுறை வருவாய் உட்கோட்டம்

 * சீர்காழி வருவாய் உட்கோட்டம்

இந்த இரண்டு பிரிவுகளுக்கும் தனித்தனியாக தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர். விதிமுறைகளின்படி, ஒரு மாவட்டத்தில் குறைந்தபட்சம் இரண்டு தொழில் பங்கீட்டாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய நிபந்தனைகள்

விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் சில முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

* மாவட்டக் கட்டுப்பாடு: ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

* முகவரிச் சான்று: விண்ணப்பிக்கும் மாவட்டம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வணிகச் செயல்பாட்டுப் பகுதியாக இருக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரரின் நிரந்தர முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.

* முந்தைய விண்ணப்பதாரர்கள்: ஏற்கனவே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள், அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன. இருப்பினும், அவர்கள் அதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு துணைப் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

தொழில் பங்கீட்டாளர்களின் கடமைகள்

தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், கிராமப்புற இணைய இணைப்பை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றுவார்கள். 

 பொறுப்புகள் பின்வருமாறு:

* கண்ணாடி இழை கேபிள் (OFC) மற்றும் இதர நெட்வொர்க் கருவிகளை (ONT) முறையாகப் பராமரித்தல்.

 * பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக இணையச் சேவை கிடைப்பதை உறுதி செய்தல்.

* தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது சேவைத் தடைகள் ஏற்படும் போது, காலதாமதமின்றி அவற்றைச் சரிசெய்தல்.

* சேவை நிலை ஒப்பந்தத்தின் (SLA) விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றி, தரமான சேவையை வழங்குதல்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டண விவரங்கள்

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளப் போர்டல் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப பாதுகாப்பு வைப்புத் தொகை (ஒவ்வொரு துணைப் பிரிவிற்கும்) ₹ 25,000/- (திரும்பப் பெறத்தக்கது) 

பாதுகாப்பு வைப்புத் தொகை (தேர்வான பின் ஒவ்வொரு வட்டாரத்திற்கும்) ₹ 2,00,000/-

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் உள்ள ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களுடன் தாங்கள் செயல்பட விரும்பும் வருவாய் உட்கோட்டத்தைத் தேர்வு செய்து பதிவேற்ற வேண்டும்.

இறுதித் தேதி

விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான இணையதளப் பக்கம் வரும் ஏப்ரல் 10, 2026 (10.04.2026) வரை மீண்டும் செயல்படும். தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த உள்ளூர் தொழில்முனைவோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, டிஜிட்டல் தமிழ்நாடு உருவாக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு

உதவி பெற TANFINET அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தகவல் தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர் ஆக அரிய வாய்ப்பு - ஏப்ரல் 10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
தமிழக அரசின் பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர் ஆக அரிய வாய்ப்பு - ஏப்ரல் 10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
Gold and silver rate today :தங்கம் விலை சவரனுக்கு 2,880 ரூபாய் குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- நகைப்பிரியர்கள் குஷி
தங்கம் விலை சவரனுக்கு 2,880 ரூபாய் குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- நகைப்பிரியர்கள் குஷி
Apollo: இந்தியாவின் முதல் ரோபோட்டிக், டெலிசர்ஜரி சிகிச்சை! வெற்றிகரமாக செய்த அப்போலா!
Apollo: இந்தியாவின் முதல் ரோபோட்டிக், டெலிசர்ஜரி சிகிச்சை! வெற்றிகரமாக செய்த அப்போலா!
Kerala Lottery Result: வெள்ளிக்கிழமை சொர்ண கேரளா லாட்டரி; அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமா?
Kerala Lottery Result: வெள்ளிக்கிழமை சொர்ண கேரளா லாட்டரி; அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
Embed widget