மேலும் அறிய

Petrol Diesel Price Today: பொங்கல் நாளில் தித்திப்பு செய்தி? சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

Petrol Diesel Price Today, January 15: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன.

Petrol Diesel Price Today, January 15: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 15ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 604வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI Vs CSK: 3 மணி நேரத்தில் புதிய சாதனை - கம்பேக் கொடுத்த ரோகித், புள்ளிப்பட்டியல் நிலை என்ன? சென்னை வீழ்ச்சி
MI Vs CSK: 3 மணி நேரத்தில் புதிய சாதனை - கம்பேக் கொடுத்த ரோகித், புள்ளிப்பட்டியல் நிலை என்ன? சென்னை வீழ்ச்சி
MI vs CSK: சிக்கிய சிஎஸ்கே..  ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி
MI vs CSK: சிக்கிய சிஎஸ்கே.. ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி
என்ன நடக்குது மதிமுகவில்? ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ- கட்சியில் இருந்தே நீக்கச்சொன்ன மல்லை சத்யா
என்ன நடக்குது மதிமுகவில்? ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ- கட்சியில் இருந்தே நீக்கச்சொன்ன மல்லை சத்யா
TVK PMK Alliance: தவெக - பாமக கூட்டணி?  துணை முதல்வர் அன்புமணி !  விஜய் பக்கா ஸ்கெட்ச்
TVK PMK Alliance: தவெக - பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Deshpande Husband : இலங்கை அரசியல் குடும்பத்தில் மருமகளான VJ பிரியங்கா! வசி யார் தெரியுமா?Tamilan Prasanna vs Old Lady : ’’1000 ரூபாய் எதுக்கு? ’’மூதாட்டி vs தமிழன் பிரசன்னாTVK PMK Alliance : தவெக - பாமக கூட்டணி?துணை முதல்வர் அன்புமணி !விஜய் பக்கா ஸ்கெட்ச்Mayor Priya Vs Sekar Babu | MAYOR TO MLA!மேயர் பிரியாவுக்கு PROMOTION?அதிர்ச்சியில் சேகர் பாபு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI Vs CSK: 3 மணி நேரத்தில் புதிய சாதனை - கம்பேக் கொடுத்த ரோகித், புள்ளிப்பட்டியல் நிலை என்ன? சென்னை வீழ்ச்சி
MI Vs CSK: 3 மணி நேரத்தில் புதிய சாதனை - கம்பேக் கொடுத்த ரோகித், புள்ளிப்பட்டியல் நிலை என்ன? சென்னை வீழ்ச்சி
MI vs CSK: சிக்கிய சிஎஸ்கே..  ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி
MI vs CSK: சிக்கிய சிஎஸ்கே.. ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி
என்ன நடக்குது மதிமுகவில்? ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ- கட்சியில் இருந்தே நீக்கச்சொன்ன மல்லை சத்யா
என்ன நடக்குது மதிமுகவில்? ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ- கட்சியில் இருந்தே நீக்கச்சொன்ன மல்லை சத்யா
TVK PMK Alliance: தவெக - பாமக கூட்டணி?  துணை முதல்வர் அன்புமணி !  விஜய் பக்கா ஸ்கெட்ச்
TVK PMK Alliance: தவெக - பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்
Ayush Mhatre: வந்துட்டான்டா சிங்கக்குட்டி,, இந்த இண்டெண்ட் போதுமா? தெறிவிக்கவிட்ட ஆயுஷ் மாத்ரே!
Ayush Mhatre: வந்துட்டான்டா சிங்கக்குட்டி,, இந்த இண்டெண்ட் போதுமா? தெறிவிக்கவிட்ட ஆயுஷ் மாத்ரே!
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
பூணூல் போட கூடாதா? தேர்வு அறையில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதிக்கும் பிராமணர்கள்
பூணூல் போட்டு போக கூடாது! தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. வெடித்தது சர்ச்சை
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
Embed widget