மேலும் அறிய

Petrol, Diesel Price: தினந்தோறும் மாறும் காலநிலை.. மாறியதா பெட்ரோல், டீசல் விலை..? இன்றைய நிலவரம்!

Petrol, Diesel Price - June 10th: சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம். 

Petrol, Diesel Price: சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம். 

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 10) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 385 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Khamenei: சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
North Korea: உக்ரைனுக்கு தலைவலியை கொடுக்கும் டெரர் கூட்டணி; ரஷ்யாவுக்காக களமிறங்கும் வட கொரியா
உக்ரைனுக்கு தலைவலியை கொடுக்கும் டெரர் கூட்டணி; ரஷ்யாவுக்காக களமிறங்கும் வட கொரியா
Iran Slams US: “அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
“அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
IND Vs ENG Test: 3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance
எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Khamenei: சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
North Korea: உக்ரைனுக்கு தலைவலியை கொடுக்கும் டெரர் கூட்டணி; ரஷ்யாவுக்காக களமிறங்கும் வட கொரியா
உக்ரைனுக்கு தலைவலியை கொடுக்கும் டெரர் கூட்டணி; ரஷ்யாவுக்காக களமிறங்கும் வட கொரியா
Iran Slams US: “அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
“அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
IND Vs ENG Test: 3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
Annamalai: ஞானசேகரன் வழக்கு; வாயை விட்ட அண்ணாமலை - கோர்ட்டுக்கு இழுத்த வழக்கறிஞர்
ஞானசேகரன் வழக்கு; வாயை விட்ட அண்ணாமலை - கோர்ட்டுக்கு இழுத்த வழக்கறிஞர்
வால்பாறை எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்: அதிமுகவில் எதிர்பாராத இழப்பு.. தொண்டர்கள் சோகம்!
வால்பாறை எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்: அதிமுகவில் எதிர்பாராத இழப்பு.. தொண்டர்கள் சோகம்!
அணு ஆயுதத்தை சோதித்ததா ஈரான்.? பூகம்பம் வந்ததால் கிளம்பிய சந்தேகம் - நடந்தது என்ன.?
அணு ஆயுதத்தை சோதித்ததா ஈரான்.? பூகம்பம் வந்ததால் கிளம்பிய சந்தேகம் - நடந்தது என்ன.?
Valluvar Kottam: ரூ.80 கோடி கொட்டி அப்கிரேட், வள்ளுவர் கோட்டம் பெற்ற அப்டேட்கள் என்ன? புதிய வசதிகளின் விவரங்கள்
Valluvar Kottam: ரூ.80 கோடி கொட்டி அப்கிரேட், வள்ளுவர் கோட்டம் பெற்ற அப்டேட்கள் என்ன? புதிய வசதிகளின் விவரங்கள்
Embed widget