மேலும் அறிய

IPO Tips: ஐபிஓ மூலம் பங்குகள் வாங்க திட்டமா? உங்களுக்கான ஒதுக்கீடுகள் எப்படி கிடைக்கும் தெரியுமா? விவரங்கள் உள்ளே

IPO Tips: ஐபிஓ வாயிலாக விண்ணப்பதாரர்களுக்கு பங்குகள் எப்படி ஒதுக்கப்படுகின்றன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPO Tips: சந்தா காலத்தின் போது பங்குகளுக்கான தேவையே ஐபிஓ ஒதுக்கீட்டை இறுதி செய்கிறது.  அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் சந்தா செலுத்தினால் அது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறும்.

ஐபிஓ என்றால் என்ன?

ஒரு தனியார் நிறுவனம் பொதுநிறுவனமாக மாற முடிவு செய்த பிறகு, பங்குச்சந்தைகளுக்கு செல்வதற்கு முன்பாக ​​பொது மக்களுக்கு ஐபிஓ மூலம் அதன் பங்குகளை வழங்குகிறது. ஐபிஓவில் பங்குகளை வாங்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், தாங்கள் வாங்க விரும்பும் பங்குகளின் எண்ணிக்கை மற்றும் என்ன விலையில் வாங்க விருப்பம் என்பன போன்ற விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கிறார்கள். ஐபிஓ ஒதுக்கீடு என்பது ஆரம்ப பொதுச் சலுகையின் போது (ஐபிஓ) பங்குகளுக்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்களுக்கு பங்குகளை ஒதுக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. IPO ஒதுக்கீடு நிலை மூலம், முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்க முடியும்.

ஐபிஓ மூலம் பங்குகளின் ஒதுக்கீட்டை இறுதி செய்யும் முக்கிய காரணிகள்:

சந்தா தேவை: சந்தா காலத்தில் பங்குகளுக்கான தேவையே,  ஐபிஓ ஒதுக்கீட்டை  இறுதி செய்யும் முக்கிய காரணியாகும்.  அதிகமான நபர்கள்  சந்தா செலுத்தினால் பங்குகளின் ஒதுக்கீடு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறும். இருக்கின்ற பங்குகளின் எண்ணிக்கையை  விட அதிகமான முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க விரும்புகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

சில்லறை விற்பனை மற்றும் நிறுவன தேவை: பல ஐபிஓக்களில், சில்லறை முதலீட்டாளர்களுக்கும் நிறுவன முதலீட்டாளர்களுக்கும் தனி ஒதுக்கீடு உள்ளது. ஒதுக்கீடு செயல்முறையானது, ஒழுங்குமுறை தேவைகள் அல்லது வழங்குபவரின் விருப்பங்களின் அடிப்படையில் சில வகை முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

சலுகை விலை: ஐபிஓவின் சலுகை விலை தேவையை பாதிக்கிறது. சலுகை விலை அதிகமாக அமைக்கப்பட்டால், அது முதலீட்டாளர்களைத் தடுக்கலாம், இது குறைந்த சந்தா நிலைகளுக்கு வழிவகுக்கும். மாறாக, ஒரு நியாயமான சலுகை விலை அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும், தேவையை அதிகரிக்கும் மற்றும் சந்தையில் அதிக போட்டித்தன்மையை ஏற்படுத்துகிறது.

நிறுவனத்தின் அடையாளம் மற்றும் அதன் செயல்திறன்: முதலீட்டாளர்கள் IPO மூலம் பங்குகளை வாங்குவதற்கு முன்பாக நிறுவனத்தின் சுயவிவரம், நிதி செயல்திறன், வளர்ச்சி திறன் மற்றும் தொழில்துறை போக்குகளை ஆராய வேண்டும். வலுவான பதிவு, உறுதியான நிதிநிலை மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிறுவனம் அதன் பங்குகளுக்கு அதிக தேவையை உருவாக்கி, பங்குகளின் ஒதுக்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சந்தை நிலைமைகள்: ஐபிஓக்கள் பொருளாதார குறிகாட்டிகள், முதலீட்டாளர் உணர்வு மற்றும் சந்தை ஏற்ற இறக்கம் உள்ளிட்ட பரந்த சந்தை நிலைமைகளால் பாதிக்கப்படுகின்றன. சாதகமான சந்தை நிலைமைகள் பொதுவாக ஐபிஓ பங்குகளுக்கான அதிக தேவைக்கு வழிவகுக்கும், அதே சமயம் நிலையற்ற அல்லது கரடுமுரடான சந்தைகள்  ஒதுக்கீட்டைப் பாதிக்கலாம்.

ஐபிஓ பங்குகளின் ஒதுக்கீட்டை ஆன்லைனில் அறிவது எப்படி?


ஐபிஓ பதிவாளரின் இணையதளத்தை அணுகுங்கள்: பங்குகளின் ஒதுக்கீடு உட்பட ஐபிஓ செயல்முறையை நிர்வகிப்பதற்கு ஐபிஓவிற்கான பதிவாளர் தான் பொறுப்பு. எனவே, முதலில் நீங்கள் விண்ணப்பித்த ஐபிஓவைக் கையாளும் பதிவாளரின் இணையதளத்தைப் பார்வையிடவும். இந்தத் தகவல் பொதுவாக ஐபிஓ ப்ரோஸ்பெக்டஸ் அல்லது ஐபிஓ பட்டியலிடப்பட்டுள்ள பங்குச் சந்தை இணையதளத்தில் கிடைக்கும்.

ஐபிஓ ஒதுக்கீடு பிரிவைக் கண்டறியுங்கள்: பதிவாளரின் இணையதளத்தில், ஐபிஓ ஒதுக்கீடு தொடர்பான பகுதியைத் தேடவும். இது "ஐபிஓ ஒதுக்கீடு நிலை" அல்லது "ஒதுக்கீடு நிலையைச் சரிபார்க்கவும்" என குற்ப்பிடப்பட்டு இருக்கும்.

தேவையான விவரங்களை வழங்கவும்: உங்கள் IPO ஒதுக்கீடு நிலையைச் சரிபார்க்க, உங்களது PAN (நிரந்தர கணக்கு எண்), விண்ணப்ப எண் அல்லது உங்கள் DP (டெபாசிட்டரி பங்கேற்பாளர்) ஐடி ஆகிய தகவல்களை பதிவிடுங்கள். அனைத்தையும் சரிபார்த்துவிட்டு விவரங்கள சமர்ப்பியுங்கள். 

ஒதுக்கீட்டு நிலையைப் சரிபாருங்கள்: தேவையான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் IPO ஒதுக்கீட்டின் நிலை திறையில் தோன்றும்.  அதில், உங்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதும்,  அப்படியானால் எத்தனை பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற வ்வரங்களும் அடங்கும். 

 பல முறை சரிபாருங்கள்: சில நேரங்களில், அதிகப்படியான அணுகுதல் அல்லது பிற தொழில்நுட்ப காரணங்களால், இணையதளம் உடனடியாக ஒதுக்கீடு நிலையை காண்பிக்காது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

பிற சேனல்கள் மூலம் சரிபார்க்கலாம்: பதிவாளரின் இணையதளத்தைத் தவிர, பங்குச் சந்தை இணையதளங்கள், நிதிச் செய்தி இணையதளங்கள் அல்லது உங்கள் தரகரைத் தொடர்புகொள்வதன் மூலம் IPO ஒதுக்கீடு நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.

தகவல்தொடர்புக்காக காத்திருங்கள்: உங்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சலில் பதிவாளர் அல்லது உங்கள் தரகர் மூலம் உங்களுக்கு உறுதி செய்யப்படும். 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget