மேலும் அறிய

NPS Vatsalya Scheme: குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க சூப்பர் திட்டம்- என்பிஎஸ் வாத்சல்யா பற்றி தெரியுமா?

NPS Vatsalya Scheme Details: என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் ஏற்கெனவே இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் நீட்சி ஆகும். இது குழந்தைகளுக்கான முதலீட்டை முதன்மையாக வைத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான ஆன்லைன் தளத்தைத் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு PRAN எனப்படும் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணையும் அளிக்கிறார். இதுதொடர்பாக நாடு முழுவதும் 75 இடங்களில் NPS Vatsalya நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், NPS Vatsalya திட்டம் என்றால் என்ன? யாரெல்லாம் இதில் சேர முடியும்? திட்டத்தின் பயன் குறித்துக் காணலாம்.

வாத்சல்யா திட்டம் என்றால் என்ன? (What is NPS Vatsalya scheme?)

என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் ஏற்கெனவே இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் நீட்சி ஆகும். இது குழந்தைகளுக்கான முதலீட்டை முதன்மையாக வைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மேலாண்மை செய்கிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து பெற்றோர் முதலீடு செய்யலாம். இதன்மூலம் எல்லா வகையான பொருளாதார நிலையில் இருக்கும் குடும்பத்தினரும் வாத்சல்யா திட்டத்தில் சேர முடியும்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் சிறு வயதில் இருந்தே இந்தத் திட்டத்தில் சேரலாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, முதலீட்டுக்குக் கூட்டு வட்டி வழங்கப்படும்.  

என்ன தகுதி?

* இந்தியக் குடிமகனாக இருக்கும் பெற்றோரே இந்தத் திட்டத்தில் சேர முடியும்.

* குழந்தைக்கு 18 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

* கேஒய்சி (KYC - Know Your Customer) செய்திருக்க வேண்டும்.


NPS Vatsalya Scheme: குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க சூப்பர் திட்டம்- என்பிஎஸ் வாத்சல்யா பற்றி தெரியுமா?

பணத்தைப் பெறுவது எப்படி?

என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் திறந்தபிறகு 3 ஆண்டுகள் கழித்தே, பணத்தை எடுக்க முடியும். எனினும் பகுதி அளவு மட்டுமே எடுக்க முடியும்.

குழந்தைகள் 18 வயதை எட்டும் வரை, படிப்பு, குறிப்பிட்ட உடல் நலக்குறைவு, 75 சதவீத உடல் ஊனம் ஆகிய காரணங்களுக்காக 3 முறை வரை பணத்தை எடுக்கலாம்.

18 வயது நிரம்பியதும் என்ன செய்யலாம்?

18 வயது ஆனதுடன் இந்தத் திட்டத்தில் உள்ள மொத்தப் பணத்தையும் ஒட்டுமொத்தமாகப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் எடுக்க முடியும். அதற்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில், இருக்கும் பணத்தில் 20 சதவீதத் தொகையை ஒரே கட்டமாக எடுக்க முடியும்.

அதேபோல என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் கணக்கை, குழந்தைகள் தேவையான வயதை (18) அடைந்தவுடன், வழக்கமான என்பிஎஸ் கணக்காக (NPS Account) எளிதாக மாற்றலாம். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு.. ஏமாந்த ஆண்கள்!
குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு.. ஏமாந்த ஆண்கள்!
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Embed widget