மேலும் அறிய

SBI Survey On ITR Files: அதிகரிக்கும் வருமான வரி தாக்கல்.. 2023-23 நிதியாண்டில் ரூ.8.5 கோடியா? - எஸ்பிஐ ஆய்வறிக்கை

நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ஆய்வறிக்கை:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின்  விவரங்களின் அடிப்படையில், பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் வரி செலுத்துவதன் மூலம் ஏற்படும் முன்னேற்றங்கள், நடுத்தர குடும்பங்களின் வருவாய் வளர்ச்சி மற்றும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உய்ர்வு போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. 2011-12 நிதியாண்டிலிருந்து 2022-23 நிதியாண்டு வரையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் விவரங்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

ஆய்வு செய்தது எப்படி?

மாநில வாரியாக வரி செலுத்தியோரின் விவரங்கள் கிடைக்காததால், ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் ஆய்வறிக்கையின்படி, 2047ம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகை 161 கோடியாக இருக்கும். ஐநா அறிக்கயின்படி, வேலை செய்யும் வயதான 15 முதல் 64 வயது வரையிலான மக்கள் தொகை கொண்ட காலம் இந்தியாவில் 2040ம் ஆண்டு உச்சத்த எட்டி அதன் பிறகு சரிவை தொடங்கும். ஐநா அறிக்கையின்படி, 2047ம் ஆண்டு நாட்டின் மொத்த வேலை திறனில் 22 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபடுவர். அதோடு விவசாயம் அல்லாத பிற பணிகளில் ஈடுபடுவோர் வரிகளுக்கு கீழ் கொண்டுவரப்படுவர். மேற்குறிப்பிடப்பட்ட கூறுகளை அடிப்படையாக கொண்டு, எஸ்பிஐ வங்கி ஆய்வை நடத்தி முடித்துள்ளது. அதில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.8 கோடி பேர்:

கடந்த 2023ம் ஆண்டில் 7.8 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதேநேரம், 2022ம் ஆண்டில் 7.3 கோடி பேர் வருமான வரிதாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளிலும் வரி செலுத்தியவர்களில் 75 சதவிகிதம் பேர் அதாவது 5.8 கோடி பேர், குறிப்பிட்ட கால அவகாசம் முடிவதற்கு முன்பாகவே, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில், குறிப்பிட்ட கால அவகாசம் முடிவடைந்த பிறகு வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2020ம் ஆண்டு 60 சதவிகிதத்திலிருந்த இந்த முறை 2023ம் ஆண்டு 25 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நடப்பாண்டில் புதிய மைல்கல்: 

நடப்பு நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஜுலை 31ம் தேதி நிறைவடைந்தது. அன்றைய தேதியின் முடிவில் 6.8 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதேநேரம், அபராதத்துடன் சேர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 2 கோடி பேர் வரையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாத்தியமானால், வருமான வரி தாக்கல் செய்வதில் 2023ம் ஆண்டு புதிய உச்சத்தை எட்டும்.  இது வரி செலுத்துவோர் மத்தியில் உள்ள ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதோடு வருமான வரி செலுத்தும் படிவங்கள் மற்றும் செயல்முறைகளை எளிமைப்படுத்தியதோடு, திறமையான டிஜிட்டல்மயமாக்கல் எந்தளவிற்கு உதவிகரமாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.

மாநில வாரியான விவரங்கள்:

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலஙக்ள், வருமான வரி தாக்கல் செய்ததில் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. இந்த குறிப்பிட்ட 5 மாநிலங்களில் இருந்து மட்டும் 48 சதவிகித வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டை காட்டிலும் 2023ம் ஆண்டில் கூடுதலாக 64 லட்சம் பேர் கூடுதலாக தங்களது வருவாய் கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் கூடுதலாக 20 சதவிகிதம் அளவிற்கு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளன.   

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Embed widget