மேலும் அறிய
Advertisement
TN budget 2023: சோழர்களின் பெருமையை பறைசாற்ற தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சிகயகம் - நிதியமைச்சர் அறிவித்த அறிவிப்புகள்!
சோழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2023-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவரது அறிவிப்பில் வெளியான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கீழே காணலாம்.
- வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியை குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.
- மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
- அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தமிழ்நாட்டில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
- வயது முதிர்ந்த 590 தமிழ் அறிஞர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.
- கடல் பல கடந்து, சமர் பல வென்று உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை பார்போற்றும் வகையில் பறைசாற்றிட தஞ்சை மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
- சென்னை சங்கமம் கலை விழா போன்று மேலும் எட்டு நகரங்களில் நடத்தப்படும்.
- தமிழ்நாடு முழுக்க 20 புதிய நாட்டுப்புறக் கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்
- இலங்கைத் தமிழர்களுக்கு 3959 வீடுகள் கட்ட 233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
- தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு தொடர் முயற்சியால் மாநில அரசின் வரி வருவாய் 6.11 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- 711 தொழில் நிறுவனங்களில் 8.35 லட்சம் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் விரிவாக்கம் செய்யப்படும்.
- சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் தொடங்கப்படும்.
- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் தேர்ந்தெடுக்கப்பட்ட(மதிப்பீட்டு தேர்வு மூலம்) 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூபாய் 7 ஆயிரத்து 500 முதன்மை தேர்வுக்கு ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை என ஆண்டுக்கு ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆகிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
மேலும் படிக்க: TN Budget 2023 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டில், மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மேலும் படிக்க:AIADMK Walkout: பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்ததும் அமளியில் ஈடுபட்ட அதிமுக வெளிநடப்பு! காரணம் என்ன?
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
தேர்தல் 2024
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion