மேலும் அறிய

Pothys Swarna Mahal | போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகைக்கடை திறப்பு - 150 ஜோடிகளுக்கு இலவச திருமணம்..!

திருநெல்வேலியில் போத்தீஸ் ஸ்வர்ணமஹால் திறப்பு விழாவை முன்னிட்டு 150 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜவுளி வியாபாரத்தில் கோலோச்சி வரும் நிறுவனமாக விளங்கி வருகிறது போத்தீஸ் நிறுவனம். தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான போத்தீஸ் ஜவுளி வியாபாரத்தில் நான்கு தலைமுறைகளாக சிறந்து விளங்குகிறது. போத்தீஸ் நிறுவனம் தங்களது நீண்டகால கனவான தங்கநகை வியாபாரத்தில் கால் பதித்துள்ளது. ஜவுளி வியாபாரத்தில் கோலோச்சிய போத்தீஸ் தங்களது முதலாவது தங்க நகைக்கடையை திருநெல்வேலியில் போத்தீஸ் ஸ்வர்ணமஹால் என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.

பரிபூர்ண கும்பத்தை அடையாளமாக கொண்ட போத்தீஸ் ஸ்வர்ணமஹால் திறப்பு விழாவை முன்னிட்டும், பொதுமக்களுக்கு நன்றி கூறும் விதமாக 150 ஜோடிகளுக்கு இலவசமாக போத்தீஸ் நிறுவனம் சார்பில் இலவசமாக நடத்தி வைத்தார். 150 மணமக்களுக்கும் திருமண புத்தாடைகள், திருமாங்கல்யம், தங்க மோதிரம் என 12 கிராம் தங்கமும், பீரோ, எவர்சில்வர் பாத்திரங்கள் மறறும் 10 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பும் போத்தீஸ் நிறுவனத்தின் சார்பாக சீதனமாக வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பு விதிகள் காரணமாக மூன்று மத ஜோடிகளுக்கு மட்டும், அந்தந்த மதங்களின் முறைப்படி போத்தீஸ் நிறுவனர் ரமேஷ் தலைமையில் திருமணம் நடைபெற்றது.  மற்ற ஜோடிகளுக்கு அவரவர் இடங்களில் திருமணம் நடைபெற்றது.

Pothys Swarna Mahal | போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகைக்கடை திறப்பு - 150 ஜோடிகளுக்கு இலவச திருமணம்..!

போத்தீஸ் நிறுவனம் நடத்தி வைத்த இந்த திருமணம் பற்றியும், சீதனம் பற்றியும் பேசிய மணமகள்கள் சிலர் தங்கள் வீடுகளில் இருந்து செய்திருந்தால் கூட இந்தளவு பணம் அளித்து திருமணம் நடத்தியிருக்க மாட்டார்கள். பணம் இல்லாத நேரத்தில் இந்தளவு சீதனத்துடன் திருமணம் நடத்தி வைத்த போத்தீசுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று மனமார நன்றி கூறினர்.

சில இடங்களில் மணமகள்களின் தாயாரும், மணமகள்களும் ஆனந்த கண்ணீருடன், தங்கமாக ஒரு பொட்டு கூட திருமணம் நடத்துவதற்கு எங்களிடம் இல்லை. ஆனால், இந்தளவு சீதனத்தை நாங்கள் செய்வோம் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினர். மேலும், சில இடங்களில் மணமக்களின் பெற்றோர்கள் போத்தீஸ் நிறுவனம் வழங்கிய சீதன பாத்திரங்களில் போத்தீஸ் நிறுவனர் ரமேஷின் பெயரையே பொறிப்போம் என்றும் மெய்சிலிர்க்க நன்றி தெரிவித்தனர். மணமக்களில் சிலர் சீதன வரிசையுடன் எங்களுக்கு திருமணம் நடத்தி வைத்த போத்தீஸ் நிறுவனர் ரமேஷையும், போத்தீசையும் சாகும் வரை மறக்கமாட்டோம் என்றும், போத்தீஸ் நிறுவனத்தின் புதிய தங்க நகைக்கடை ஸ்வர்ணமஹால் மேலும், மேலும் வளர வேண்டும் என்றும் தங்களது நன்றி கலந்த வாழ்த்துகளை கூறினர். அனைவரின் பரிபூரண ஆசியுடன் போத்தீஸ் ஸ்வர்ணமஹால் திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. போத்தீஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் என பல பகுதிகளில் கிளைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget