மேலும் அறிய

Terence MacSwiney : இந்திய சுதந்திர போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய டெரன்ஸ் மெக்ஸ்வினி யார்..?

டெரன்ஸ் மேக்ஸ்வினியின் பெயரை இந்தியாவில் வசிக்கும் எவரும் நினைவில் வைத்திருக்க சாத்தியமில்லை, ஆனால் வாழ்ந்த காலத்தில், அவரது பெயர் நாடு முழுவதும் எதிரொலித்தது. ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகரும் பகத்சிங்கின் தோழருமான வங்காளப் புரட்சியாளர் ஜதின் தாஸ், 1929 செப்டம்பரில் நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தால் இறந்தபோது, ​​அவர் 'இந்தியாவின் சொந்த டெரன்ஸ் மேக்ஸ்வினி' என்று புகழப்பட்டு புனிதர் பட்டம் பெற்றார். அப்படியென்றால் யார் அந்த டெரன்ஸ் மேக்ஸ்வினி?

டெரன்ஸ் மேக்ஸ்வினி 1920ம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதியன்று இறந்தார். அயர்லாந்து, வெளியில் இருந்து காண்போருக்கு பொதுவான அபிப்ராயத்தில், கவிதை, அரசியல் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பசுமை நிறைந்த நாடு எனக்கு கூறப்படுபவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம். மேக்ஸ்வினி ஒரு கவிஞர், நாடக ஆசிரியர், துண்டுப்பிரசுரம் மற்றும் அரசியல் புரட்சியாளர், அவர் ஐரிஷ் சுதந்திரப் போரின் போது தென்மேற்கு அயர்லாந்தில் உள்ள கார்க் லார்ட் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Terence MacSwiney : இந்திய சுதந்திர போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய டெரன்ஸ் மெக்ஸ்வினி யார்..?

இந்திய தேசியவாதிகள் அயர்லாந்தில் நடந்த நிகழ்வுகளை நெருக்கமாகப் பின்பற்றினர், ஏனெனில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஐரிஷ் மக்களை பிரித்தெடுத்தல் என்பது இந்தியாவை பழிவாங்கும் நடவடிக்கையில் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தாலும், ஐரிஷ் மக்களே ஆங்கிலேயர்களால் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தப்பட்டு வீரமிக்க காலனித்துவ எதிர்ப்பு போரை பதிலடியாக பெற்றனர்.

இந்தியாவிலும், அது போன்ற எதிர்ப்பை அடக்க ஐரிஷ்கள் அழைக்கப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் குற்றவாளியான ரெஜினால்ட் டயர், முர்ரியில் பிறந்திருந்தாலும் (இப்போது பாகிஸ்தானில் உள்ளது) கவுண்டி கார்க்கில் உள்ள மிடில்டன் கல்லூரியிலும், அதன்பின் அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்களிலும் படித்தவர். பஞ்சாபின் லெப்டினன்ட்-கவர்னராக டயருக்கு சுதந்திரம் அளித்து, 'இராணுவத் தேவை' எனக் கருதி இந்தியர்களைக் கொன்று குவித்ததை மதிப்பிட்ட லிமெரிக்கில் பிறந்த ஐரிஷ் நாட்டவர் மைக்கேல் ஓ ட்வையர் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டை ஏழைகளாக்குதல், ஐரிஷ் இனத்தை துணை மனித இனமாக கருதுதல் போன்று அயர்லாந்தில் முன்பு செய்ததில் வெகு குறைவாக தான் இங்கிலாந்து இந்தியாவிற்கு செய்தது. போப்பிற்கு தங்கள் விசுவாசத்தைக் கொடுத்த மூடநம்பிக்கை கத்தோலிக்கர்கள் என்று ஐரிஷ் மக்கள் கேலி செய்யப்பட்டனர். 1879 இல் பிறந்த மேக்ஸ்வினி, தனது 20களின் பிற்பகுதியில் அரசியல் செயல்பாட்டிற்கு வந்தார். மேலும் 1913-14 ஆம் ஆண்டில் ஐரிஷ் தன்னார்வலர்கள் இணைந்து உரிமைக்காக போரிடும் 'சின் ஃபெய்ன்' என்று பெயரிடப்பட்ட ஒரு அரசியல் கட்சியை துவங்கி அதில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியை மேக்ஸ்வினிக்கு கொடுத்தனர். 


Terence MacSwiney : இந்திய சுதந்திர போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய டெரன்ஸ் மெக்ஸ்வினி யார்..?

ஏப்ரல் 1916 இன் மோசமான ஈஸ்டர் கிளர்ச்சியின் போது அவர் தீவிரமாக செயல்பட்டார், இந்த ஆயுதமேந்திய கிளர்ச்சி ஆறு நாட்கள் நீடித்தது, பிரிட்டிஷ் இராணுவம் பீரங்கி மற்றும் ஒரு பெரிய இராணுவப் படையுடன் அதை அடக்கியது. டப்ளின் பெரும்பகுதி இடிபாடுகளாக மாறியது. இந்த எழுச்சி, வரலாற்றின் மூடுபனிக்குள் மறைந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் எப்படியிருந்தாலும், வில்லியம் பட்லர் யீட்ஸ் 'ஈஸ்டர் 1916' ஐ வரலாற்றில் அழியாமல் காப்பதற்காக இருந்தார். நான்கு ஆண்டுகள், மேக்ஸ்வினி பிரிட்டிஷ் சிறைகளில் ஒரு அரசியல் கைதியாக அடைக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், மேக்ஸ்வினி ஆகஸ்ட் 1920 இல் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் அவரை இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளின் கவனத்திற்குக் கொண்டுசென்றது. 'தேசத்துரோக கட்டுரைகள் மற்றும் ஆவணங்களை' வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஆகஸ்ட் 12 அன்று அவர் கைது செய்யப்பட்டார், ஆவணங்கள் வைத்திருப்பதற்காக கைது செய்யப்படுவது இன்றைய இந்தியாவில் மிகவும் பரிச்சயமான சூழ்நிலை என்றாலும் அன்றைக்கு வெகு அதிசயமாக பார்க்கப்பட்டது. சில நாட்களுக்குள் நீதிமன்றத்தால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள பிரிக்ஸ்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேக்ஸ்வினி அந்த தீர்ப்பாயத்தின் முன் அறிவித்தார், "எனது சிறைத்தண்டனையின் காலத்தை நான் முடிவு செய்துவிட்டேன். உங்கள் அரசாங்கம் என்ன செய்தாலும், நான் ஒரு மாதத்திற்குள் விடுதலையாகிவிடுவேன், உயிருடன் அல்லது இறந்து." அவர் உடனடியாக சிறைக்குள்ளேயே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், அவரை விசாரணை செய்த இராணுவ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் எதிர்ப்புத் தெரிவித்தார், மேலும் பதினொரு குடியரசுக் கைதிகள் அவருடன் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்தனர். ஐரிஷ் குடியரசுவாதத்தின் மீது அதிக விருப்பம் கொண்ட, அமெரிக்காவில் உள்ள பெரிய ஐரிஷ் புலம்பெயர்ந்த மக்கள் அவருக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க தொடங்கினர்; ஆனால் மாட்ரிட் முதல் ரோம் வரை, பியூனஸ் அயர்ஸிலிருந்து நியூயார்க் வரை மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா வரை, மேக்ஸ்வினியின் விடுதலைக்கான கோரிக்கை தொழிலாள வர்க்கத்தால் மட்டுமல்ல, முசோலினி மற்றும் கறுப்பின தேசியவாதி போன்ற அரசியல் பிரமுகர்களால் கூட குரல் கொடுக்கப்பட்டது.


Terence MacSwiney : இந்திய சுதந்திர போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய டெரன்ஸ் மெக்ஸ்வினி யார்..?

நாட்கள் நீண்டு கொண்டே சென்றது, அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்; இதற்கிடையில், சிறையில், ஆங்கிலேயர்கள் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க முயன்றனர். அக்டோபர் 20 அன்று, மேக்ஸ்வினி கோமாவிற்கு சென்றார். எழுபத்து நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து, அக்டோபர் 25 அன்று அவர் மரணமடைந்தார்.

இந்தியாவில், மேக்ஸ்வினியின் துன்பங்கள் இதேபோல் நாட்டையே புயலால் தாக்கின. மேக்ஸ்வினியால் காந்தி பெரிதும் 'பாதிக்கப்பட்டார்' என்பது பலரால் கருதப்படுகிறது, ஆனால் அவரது உறுதிப்பாடு, தேசபக்தி மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றால் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி தூண்டப்பட்டாலும், காந்தி 'உண்ணாவிரதம்' மற்றும் 'உண்ணாவிரதப் போராட்டம்' ஆகியவற்றுக்கு இடையே வேறுபடுத்திக் காட்டினார். ஆயினும்கூட, மேக்ஸ்வினி ஆயுதமேந்திய புரட்சியாளர்களுக்கும் - ஜவஹர்லால் நேருவுக்கும் ஒரு ஹீரோவாக இருந்தார்.

மேக்ஸ்வினி இறந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு நேரு அவரது மகள் இந்திராவுக்கு கடிதம் எழுதுகையில், அயர்லாந்தின் உண்ணாவிரதப் போராட்டம் நாட்டையே உலுக்கி வைத்தது என்றும் உலகையே மெய்சிலிர்க்க வைத்தது என்றும் குறிப்பிட்டார்: "காவல்துறையில் வைக்கப்பட்டபோது அவர் உயிருடன் இருந்தாலும் இறந்தாலும் வெளியே வருவேன் என்று அறிவித்து உணவு உட்கொள்வதை தவிர்த்தார். எழுபத்தைந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பிறகு, அவரது சடலம் சிறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.' லாகூர் சதி வழக்கில் சிக்கிய பகத் சிங், பதுகேஷ்வர் தத் மற்றும் பலர் காந்தியின் உதாரணம் என்பதை விட மேக்ஸ்வினியின் உதாரணம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.



Terence MacSwiney : இந்திய சுதந்திர போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய டெரன்ஸ் மெக்ஸ்வினி யார்..?

1929ம் ஆண்டின் நடுப்பகுதியில் பகத் சிங்கும் பதுகேஷ்வர் தத்தும் 'அரசியல் கைதிகள்' என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த போது, ​​அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வங்காள அரசியல் ஆர்வலரும் வெடிகுண்டு தயாரிப்பாளருமான ஜதீந்திரநாத் தாஸ், சிறைக்கும், சிறையில் உள்ள மோசமான நிலைமைகளுக்கும் அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில்லை என எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். 

ஜதீந்த்ரநாத் 63 நாட்களுக்குப் பிறகு 13 செப்டம்பர் 1929 அன்று இறந்தார். தேசம் துக்கமடைந்தது: நேரு தனது சுயசரிதையில் பதிவு செய்வது போல, "ஜதின் தாஸின் மரணம் நாடு முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது." தாஸ் கல்கத்தாவில் அரசு இறுதிச் சடங்கைப் பெற்றிருந்தார். காந்தி உண்ணாவிரதத்தின் மாஸ்டர் என்றாலும், உண்ணாவிரதத்தின் நவீன வரலாறு டெரன்ஸ் மேக்ஸ்வினியிடம்தான் தொடங்குகிறது. அரசியல் நாடகத்தின் ஒரு வடிவமாக உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தேசத்தை மட்டுமல்ல, உலகக் கருத்தையும் எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை காந்தி அங்கீகரித்திருக்கலாம், குறிப்பாக மேக்ஸ்வினியின் தியாகத்திற்குப் பிறகு. இருப்பினும், மேக்ஸ்வினியின் வாழ்க்கைக் கதை தனது சொந்த மக்களின் உரிமைகளைப் போற்றத்தக்க வகையில் பாதுகாக்கும் தனித்தன்மையைத் தவிர மற்ற பல காரணங்களுக்காக இந்தியாவில் கடுமையாக எதிரொலிக்க வேண்டும்.

இந்தியாவை வீணாக்குவதற்கு முன்பு இங்கிலாந்து அயர்லாந்தை வளர்ச்சியடையச் செய்தது, மேலும் அயர்லாந்து பல விஷயங்களில் இந்தியாவைப் போலவே நிலக் குடியேற்றம், வரிவிதிப்பு, பஞ்ச நிவாரணம், கருத்து கூறுதலை அடக்குதல் மற்றும் பல விஷயங்களில் பிரிட்டிஷ் கொள்கைகளுக்கு ஒரு ஆய்வகமாக இருந்தது. இந்தியாவில் அயர்லாந்து செய்த விஷயங்களை வைத்து "மிருகத்தனத்திற்கு ஆளானவர்கள் மற்றவர்களை மிருகத்தனமாக நடத்துவார்கள்" என்று கூறப்படும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாகும் உண்மை ஆகிறது.


Terence MacSwiney : இந்திய சுதந்திர போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய டெரன்ஸ் மெக்ஸ்வினி யார்..?

மறுபுறம், டெரன்ஸ் மேக்ஸ்வினியின் புராணக்கதை, ஐரிஷ் மற்றும் இந்தியர்களின் ஒற்றுமையின், சமீபத்திய ஆண்டுகளில் சில அறிஞர்களால் ஆராயத் தொடங்கியுள்ள களிப்பூட்டும் சிக்கலான வரலாற்றை சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, ஐரிஷ் பெண்ணான அன்னி பெசண்ட் உருவத்தை இந்தியர்கள் நீண்ட காலமாக அறிந்திருக்கிறார்கள், ஆனால் அத்தகைய ஒற்றுமையின் வெளிப்பாடுகள் நாடுகடந்து பல வடிவங்களை எடுத்தன. உலக மக்கள் தனித்து தனித்து தனியாக இருப்பது மற்றும் இனவெறி தேசியவாதம் போன்றவற்றால் குழப்பமடைந்ததாகத் தோன்றும் நேரத்தில், மேக்ஸ்வினியின் கதை எல்லைகளைத் தாண்டி அனுதாபத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

View More
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget