மேலும் அறிய

Tesla’s India Launch: அப்படி போடு! ஒருவழியாக இந்தியா வரும் டெஸ்லா கார்! உற்பத்தி ஆலை எங்கு அமைகிறது தெரியுமா?

Tesla’s India Launch: பிரபல மின்சார கார் நிறுவனமான டெஸ்லா 2024ம் ஆண்டு இந்திய சந்தையில், தனது கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tesla’s India Launch: பிரபல மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் உற்பத்தி ஆலை,  இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் டெஸ்லா கார்:

இன்ஜின்களுக்கு பதிலாக பேட்டரிகளை கொண்டும் காரை இயக்கலாம் என கூறி, டெஸ்லா நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கியபோது அதனை யாரும் அன்று பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால், இன்று ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையே, மின்சார வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. அதில் டெஸ்லா நிறுவனம் முக்கிய பங்கு வகித்தாலும், தற்போது வரை அந்நிறுவனத்தின் நேரடி விற்பனை இந்தியாவில் தொடங்கவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் பல்வேறு முறை அரங்கேறியுள்ளன. சலுகைகள் மற்றும் ஒழுங்குமுறை பரிசீலனைகள் குறித்து நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே விவாதங்கள் நடந்து வருகின்றன. அண்மையில் கூட இந்தியாவிஸ் டெஸ்லா உற்பத்தி ஆலை மற்றும் விற்பனை தொடங்குவது தொடர்பாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

குஜராத்தில் டெஸ்லா தொழிற்சாலை? 

இந்நிலையில், 2024ம் ஆண்டில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அறிமுகமாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள குஜராத் உச்சி மாநாட்டில் இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  டெஸ்லா ஆலைக்கான சாத்தியமான தளங்களாக சனந்த், தோலேரா மற்றும் பெச்சராஜி உள்ளிட்ட பல இடங்களை மாநில அரசு முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கை டெஸ்லாவின் இந்திய உற்பத்தித் தளத்தில் இருந்து ஏற்றுமதி உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் இலக்குடன் ஒத்துப்போகிறது. மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி போன்ற பெரிய வாகன உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி வசதிகளை ஏற்கனவே பெற்றுள்ள குஜராத்தில், டெஸ்லா ஆலையும் அமைந்தால் வாகனத் துறையின் முக்கிய மையமாக அம்மாநிலம் மேலும் வலுவடையும்.

டெஸ்லாவிற்கு சிறப்பு சலுகைகள்?

மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு மானியம் வழங்கப்படாது என்பது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக உள்ளது. ஆனால்,  முழுமையாகக் கட்டமக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்யும்போது டெஸ்லா நிறுவனம் 15-20 சதவிகிதம் இறக்குமதி வரியில் சலுகையை அனுபவிக்கலாம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மத்திய அரசால் அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும் மிகப்பெரிய சலுகையாக இருக்கலாம். இருப்பினும், இந்தச் சலுகையானது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி நிறுவனத்தை நிறுவுவதைச் சார்ந்துள்ளது. அதேநேரம், வெளிநாட்டு நிறுவனத்திற்கு மட்டும் குறிப்பிட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய உள்நாட்டு நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. 

 

 

 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?
கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?
Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?
Embed widget