மேலும் அறிய

பிபின்ராவத் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மோட்சதீபம்

ஹெலிக்காப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு வேலூர் கோட்டையினுள் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது

கடந்த 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் எதிர்பாராத விதமாக நடந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய அஞ்சலியும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டு வருகிறது.


பிபின்ராவத் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மோட்சதீபம்

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையினுள் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. கனமழை பெய்ததன் காரணமாக கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்ததால் நேற்று வரை பக்கதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள தண்ணீர் ராட்சத மோட்ட்டார் மூலம் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே ஜலகண்டேஸ்வரர் ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பாக இன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் முப்படை தளபதியான பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும் விதமாகவும் கோவில் வளாகத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. 


பிபின்ராவத் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மோட்சதீபம்

கோவிலில் முப்படை தளபதிக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுவதை கண்ட கோயிலுக்கு வழிபட வந்த பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பக்தர்கள் பலரும் தாமாக முன்வந்து நம் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு ஆஞ்சலி செலுத்த ஆர்வம் காட்டி  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், மேலும் இது போன்ற துயர சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் இருக்கவும் வேண்டிக்கொண்டு பிபின் ராவத் உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செய்து வணங்கி சென்றனர். 


பிபின்ராவத் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மோட்சதீபம்

மோட்ச தீபம் என்பது உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆன்மீக முறைப்படி செய்யப்படும் ஒரு வழக்கம் ஆகும். குறிப்பாக விபத்து போன்ற சம்பவங்களில் திடீர் மரணம், அகால மரணம் ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் ஆன்மாவை சாந்தியடைய செய்ய மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் சிவன் கோவில்களில் மட்டுமே மோட்ச தீபம் ஏற்றப்படும். மற்ற கோவில்களில் ஏற்றும் வழக்கம் இல்லை. இதற்கு முன் உயிரிழந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்காலம், பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியின், கர்நாடக சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரது மறைவுக்கு வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Embed widget