மேலும் அறிய

ரூ.250 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு!

250 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லியில் அமைச்சர் பிகே சேகர் பாபு தலைமையில் மீட்பு.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலைய துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றுபவர்களை பணிநிரந்தரம் செய்ய ஆணையிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என உறுதி அளித்திருந்தனர். ஆனால் அதன்பின் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதை செயல்படுத்த தவறிவிட்டனர். இப்போது துறை சார்ந்த அனைத்து தகவல்களையும் திரட்டி உடனடியாக அதற்கு உண்டான பணி நியமன ஆணை தரப்பட உள்ளது, யாராவது விடுபட்டு போயிருந்தால் மீண்டும் மனு அளித்தால் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார். அறங்காவலர் குழுவில் எங்கேனும் பிரச்சனை என்றால் உடனடியாக தக்கார் நியமிக்கபட்டு ஒரு நாள் கூட ஒரு பணிகள் கூட பாதிப்பு ஏற்படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அறங்காவலர் குழு நியமனத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, அறங்காவலர் குழு பதவிக்காலம் 3 ஆண்டுகள் என இருந்ததை இறையன்பர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் வகையில் 2 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.

 

அதுமட்டுமின்றி தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலில்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,  மேலும் இந்து அறநிலையத் துறையில் உள்ள அனைத்து துறைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை சரி செய்யபட்டு வருகிறது என்றார். மேலும்  தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பூந்தமல்லியில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. 250 கோடி ரூபாய் மதிப்புடய இந்த நிலங்கள் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களாக இதுவரை 132 கிரவுண்டு நிலங்களை இந்து சமய அறநிலைய துறை மீட்டெடுத்துள்ளது.

 

இந்து சமய அறநிலைய துறை அமைச்சராக திமுக ஆட்சியில் பிகே சேகர் பாபு பதவியேற்றது முதல் இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் பல காணமுடிகிறது. அவர் பதவியேற்றதில் இருந்து தமிழகத்தில் தற்போது வரை சுமார் 180 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும்  கோயில் நிலங்களை மீட்க புதிய சட்ட திட்டங்களை கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி இனி கோயில் நிலங்களில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என்ற நிலை வந்துள்ளது, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடரும் "இறைவன் சொத்து இறைவனுக்கே" என்ற வகையில் ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலைய துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றுபவர்களை பணிநிரந்தரம் செய்ய ஆணையிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என உறுதி அளித்திருந்தனர். ஆனால் அதன்பின் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதை செயல்படுத்த தவறிவிட்டனர். இப்போது துறை சார்ந்த அனைத்து தகவல்களையும் திரட்டி உடனடியாக அதற்கு உண்டான பணி நியமன ஆணை தரப்பட உள்ளது, யாராவது விடுபட்டு போயிருந்தால் மீண்டும் மனு அளித்தால் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார். அறங்காவலர் குழுவில் எங்கேனும் பிரச்சனை என்றால் உடனடியாக தக்கார் நியமிக்கபட்டு ஒரு நாள் கூட ஒரு பணிகள் கூட பாதிப்பு ஏற்படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அறங்காவலர் குழு நியமனத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, அறங்காவலர் குழு பதவிக்காலம் 3 ஆண்டுகள் என இருந்ததை இறையன்பர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் வகையில் 2 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.

ரூ.250 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு!

அதுமட்டுமின்றி தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலில்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,  மேலும் இந்து அறநிலையத் துறையில் உள்ள அனைத்து துறைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை சரி செய்யபட்டு வருகிறது என்றார். மேலும்  தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பூந்தமல்லியில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. 250 கோடி ரூபாய் மதிப்புடய இந்த நிலங்கள் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களாக இதுவரை 132 கிரவுண்டு நிலங்களை இந்து சமய அறநிலைய துறை மீட்டெடுத்துள்ளது. இந்து சமய அறநிலைய துறை அமைச்சராக திமுக ஆட்சியில் பிகே சேகர் பாபு பதவியேற்றது முதல் இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் பல காணமுடிகிறது. அவர் பதவியேற்றதில் இருந்து தமிழகத்தில் தற்போது வரை சுமார் 180 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.

ரூ.250 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு!

மேலும்  கோயில் நிலங்களை மீட்க புதிய சட்ட திட்டங்களை கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி இனி கோயில் நிலங்களில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என்ற நிலை வந்துள்ளது, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடரும் "இறைவன் சொத்து இறைவனுக்கே" என்ற வகையில் ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்படுகிறது. பூந்தமல்லியில் மீட்பு பணிகள் நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்டு இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது. இன்று 250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலைய துறை தன்வசபடுத்தி உள்ளது.முறையாக 78 நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தி உள்ளோம். அறநிலையத்துறையில் குறைகள் பதிவேடு துறை ஆரப்பித்தோம், இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்தோம் அதன் மூலம்,  இதுவரை 4500 குறைகள் வந்துள்ளது, மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம், விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்." என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget