மேலும் அறிய

கரூர் பண்டரிநாதன் கோயில் ஏகாதசி விழா: கருவறை சென்று தரிசித்த பக்தர்கள்!

கரூர்  ரகுமாய் சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் மூலவர் சுவாமியை ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தொட்டுத் தழுவி உதிரிப்பூக்கள் அர்ச்சனை செய்து மனதார வழிபட்டனர்.

கரூர் மாவட்டம் மத்தியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ரகுமாய் சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் இன்று ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு கருவறைக்குள் சென்று பக்தர்கள் பகவானை தரிசிக்க அனுமதிக்க பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஆனி அல்லது ஆடி மாத ஏகாதசியில் பக்தர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துவந்தனர்.


கரூர் பண்டரிநாதன் கோயில் ஏகாதசி விழா: கருவறை சென்று தரிசித்த பக்தர்கள்!

கரூர்  ஸ்ரீ ரகுமாய் சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் மூலவர் சுவாமியை ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தொட்டுத் தழுவி தாங்கள் கொண்டு வந்த உதிரிப்பூக்கள் அர்ச்சனை செய்து மனதார பகவானே செய்வித்தனர்.

பின்னர் ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களான  ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ  சங்கர விநாயகர் மற்றும் உற்சவர்  ஸ்ரீ ரகுமாய் சமேத பண்டரிநாதன் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ,அதைத் தொடர்ந்து வண்ணம் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தனர். ஆலய மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ  ரகுமாய் சமேத பண்டரிநாதன் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.


கரூர் பண்டரிநாதன் கோயில் ஏகாதசி விழா: கருவறை சென்று தரிசித்த பக்தர்கள்!

அதைத் தொடர்ந்து ,பக்தர்கள் அனைவரும் ஆலயம் வலம் வந்த பிறகு உற்சவர் ஸ்ரீ  ரகுமாய் சமேத பண்டரிநாதன் சுவாமியை  மனதார வணங்கி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் துளசி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற கருவறைக்குள் சென்று பக்தர்கள் பகவானை  தரிசிக்கும் நிகழ்ச்சிக்கு கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள்ஆலயம் வருகைதந்து  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் சமேத பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். 


கரூர் பண்டரிநாதன் கோயில் ஏகாதசி விழா: கருவறை சென்று தரிசித்த பக்தர்கள்!

 

அதைத்தொடர்ந்து, கரூர் ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் ஆடி மாத ஏகாதசி விழா பக்தர்கள் பஜனை பாடலுடன் கொண்டாட்டம்

கரூர் மாவட்டம், இனாம் கரூர், வெங்கமேடு பகுதி புது குளத்துப்பாளையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் ஆடிமாத ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஆலயத்திலுள்ள மூலவர் ருக்மணி சமேத பண்டரிநாதன்க்கும் ,உற்சவர் சிலைகளுக்கும், ஆஞ்சநேயர், விநாயகர், ஆண்டாள் மற்றும் கருடாழ்வார் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அதைத் தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலய மண்டபத்தில் ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி விழா சிறப்பாக நடைபெற்றது. 


கரூர் பண்டரிநாதன் கோயில் ஏகாதசி விழா: கருவறை சென்று தரிசித்த பக்தர்கள்!

அதைத்தொடர்ந்து, ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதைத்தொடர்ந்து துளசியால் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமிகளுக்கு நாமாவளிகள் கூறினார். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle | மீண்டும் அரியணையில் செ.பாலாஜி!புதிதாக சீனுக்கு வந்த 3 பேர்! யாருக்கு எந்த துறை?CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget