மேலும் அறிய

விவசாயிகள் கவனத்திற்கு! கனமழை வெள்ளத்தில் பயிர்களை காக்கும் எளிய வழிகள்!

புயலினாலும், தொடர் கனமழையினாலும், போதிய வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையாலும் வயலில் மழைநீர் அளவுக்கு அதிகமாக தேங்கி பயிர்கள் சேதம் அடைவதை மீட்க புதிய வழி.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. புயலினாலும், தொடர் கனமழையினாலும், போதிய வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையாலும் வயலில் மழைநீர் அளவுக்கு அதிகமாக தேங்கி பயிர்கள் சேதம் அடைகின்றன. மேலாண்மை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் பயிர்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என வேளாண்மை துறை விழிப்புணர்வு.

பயிர்களை வெள்ள பாதிப்பில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்!

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. புயலினாலும், தொடர் கனமழையினாலும், போதிய வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையாலும் வயலில் மழைநீர் அளவுக்கு அதிகமாக தேங்கி பயிர்கள் சேதம் அடைகின்றன.

பின்வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.

  • நெல் வயல்களில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி நீர் தேக்கத்தை குறைக்க வேண்டும்.
  • தரைமட்டத்திலிருந்து 90 செ.மீ ஆழத்தில் வடிமுனை குழாய்களை அமைத்து நீரை வெளியேற்றினால் காற்றோட்டம் சீரடையும்.
  • மழை நீர் வடியும் போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து சுண்ணாம்பு, மக்னீசியம், போரான், கந்தகம் மற்றும் சாம்பல் சத்து கரைந்து வெளியாகிவிடும். இதனால் சத்துகள் பற்றாக்குறை ஏற்படும். மழை நீர் வடிந்ததும் தழைச்சத்து உரத்தை அம்மோனிய வடிவில் இடவும். யூரியா இடுவதாக இருந்தால் யூரியாவுடன் ஜிப்சம், மணல் 1:3:5 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் இடவும்.
  • DAP 2% இலைவழியாகத் தெளிக்கலாம்.
  • மழை வெள்ளம் காரணமாக மூழ்கிய நெற்பயிரை காக்க நீர் வடித்த பின் இலைகள் அழுகிடாமல் இருப்பின் 2% டி.ஏ.பி + 1% பொட்டாஷ் மற்றும் 1% யூரியா + 0.5% துத்தநாக சல்பேட் கரைசலை 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

மகசூல் இழப்பிலிருந்து பயிர்களை காப்பாற்ற 4 கிலோ DAP உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். மண்ணில் உள்ள நன்மைதரும் நுண்ணுயிர்களின் வளர்ச்சி சீரடைந்து, பயிருக்கு ஊட்டச்சத்து அளிக்க அதிக மழை / வெள்ளம் எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் எக்டருக்கு 2 டன் உமிக்கரியை நடும் முன் நிலத்தில் இட்டு மண்ணுடன் கலக்குவதால் நிலத்தின் வெப்பம் சீராக்கப்பட்டு ஊட்டச்சத்துகள் பயிர்களுக்குத் தடையின்றி கிடைக்க வழிவகுக்கும்.

மேலும் மேகமூட்டமான சீதோஷ்ணநிலை காரணமாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளதால் வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகப்படுத்த வேண்டும்.

நோய் தாக்குதலை கட்டுப்படுத்திட 1 கிலோ சூடோமோனாஸ் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் இட வேண்டும்.

குளிர்ச்சியான தட்பவெப்ப சூழ்நிலைகளால் பயிர்களின் வளர்ச்சி பாதிப்படைவதை தடுக்க யூரியா, ஜிப்சம்:, வேப்பம்புண்ணாக்கு 5:4:1 விகிதத்தில் கலந்து இடுதல் வேண்டும். மேலும், இலை வழியாக டை அம்மோனியம் பாஸ்பேட் தெளித்தல், தழைச்சத்துடன் சாம்பல் சத்து உரம் சேர்த்து இடல், நுண்ணூட்ட உரமிடல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

தொடர்மழைக்குப்பின்னர் நெற்பயிரில் படைப்புழு, கூண்டுப்புழு போன்ற பூச்சிகளும், பயறுவகை பயிர்களில் புரொடீனியா புழுக்கள், தத்துப்பூச்சி, அசுவினி போன்ற பூச்சிகளின் தாக்குதலும் அதிகமாக காணப்படும். படைப்புழு மற்றும் கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மிலி. குளோரிபைரிபாஸ் பூச்சிக்கொல்லியினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் பயிர் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். பயறுவகை பயிர்களில் தத்துப்பூச்சி மற்றும் அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் 200 மிலி இமிடா குளோப்ரிட் அல்லது டைமித்தோயேட் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget