மேலும் அறிய

மழைநீருடன், கழிவுநீரும் கலந்ததால் நெற்பயிர்கள் சேதம் - உசிலம்பட்டி விவசாயிகள் வேதனை

கழிவுநீர் மழைநீருடன் கலந்து நெற்பயிருக்குள் சென்ற அவலம் - நீரில் மூழ்கிய நெல்மணிகள் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கழிவுநீர் தேங்கியதால் சாய்ந்த நெல்மணிகள் விளைநிலத்திலேயே மீண்டும் முளைத்து சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
 
கோடை மழை

தமிழகத்தில்  அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.  திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கத்திரி வெயிலின் போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அதேபோல், வெப்ப அலையும் குறைந்துள்ளது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது முதலே நல்ல மழை பதிவாகி வருகிறது.

 மதுரை சுற்றுவட்டாரங்களில் மழை

ஏற்கனவே மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் நிறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் உசிலம்பட்டி அருகே கடந்த நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் காடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது உசிலம்பட்டி நகராட்சியில் சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் மழைநீருடன் கலந்து நெற்பயிருக்குள் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீரில் மூழ்கிய நெல்மணிகள் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சாக்கடை கால்வாயில் நீர்வரத்து

உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலிருந்து வரும் சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான வடிகால் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை நீடித்து வருகிறது. உசிலம்பட்டி கண்மாய், கவணம்பட்டி, கொங்கபட்டி என பல பகுதிகளில் உள்ள ஊரணிகளில் இந்த சாக்கடை கழிவுநீர் தேங்கி வரும் சூழலில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாக்கடை கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து, மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து உடைப்பு ஏற்பட்டு கொங்கபட்டி ஊரணி அருகே புத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.
 
உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
 
மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து வந்தால் விவசாய நிலங்களில்  பயிரிடப்பட்டிருந்த 3 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கழிவுநீர் தேங்கியதால் சாய்ந்த நெல்மணிகள் விளைநிலத்திலேயே மீண்டும் முளைத்து சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு, சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget