மேலும் அறிய

காத்து வாங்கிய 34 நேரடி நெல் கொள்முதல் நிலையம் - திருவண்ணாமலை விவசாயிகள் வேதனை

அரசின் கொள்முதல் மையத்தை விட நெல்மூட்டைகள் தனியாரிடம்  அதிக விலை போவதால் விவசாயிகள் யாரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.

திருவண்ணாமலை (Tiruvannamalai news): திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 நேரடி நெல் கொள்முதல் மையங்களில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர். 

நெல் விற்பனைக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் குறைந்த நபர்களே பதிவு  

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 முதல்  2025-ஆம் ஆண்டுக்கான சொரனவரி பருவத்துக்கு முதல் கட்டமாக 34 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. ஆனால் நேற்று மாலை வரை குறைந்த அளவிலேயே விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த காலங்களில் தனி நபர்கள் மிகவும் விலை குறைவாகவும் இடையில் அதிகமாக வைத்து வாங்கியதால் விவசாயிகள் அனைவரும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையே நாடி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் சம்பா பருவத்தின் போது அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டை ஒன்றுக்கு 2700 வரை வெளிமார்க்கெட்டில் விலை போனதனால் விவசாயிகள் யாரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு செல்லவில்லை, தாங்கள் அறுவடை செய்த நெல் முழுவதையும் உடனடியாக தனியார் நபர்களிடமே நல்ல விலைக்கு விவசாயிகள் விற்றனர். இதனால் சம்பா மற்றும் இரண்டாம் பாகத்திற்கு திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் மையங்கள் காத்து வாங்குகின்றன.


காத்து வாங்கிய 34 நேரடி நெல் கொள்முதல் நிலையம் - திருவண்ணாமலை விவசாயிகள் வேதனை

காற்று வாங்கும் நேரடி கொள்முதல் நிலையங்கள் 

இருப்பினும் இப்போது சொரனவரி பருவத்துக்கு பெரிய கிளாம்பாடி, கீழ்பெண்ணாத்தூர், அணுகுமலை, சோமாஸ்பாடி தண்டராம்பட்டு, அரட்டவாடி, பீமனந்தல், மேல்முடியனூர், காரப்பட்டு, எலத்தூர், ஆதமங்கலம், கடலாடி ,இடப்பிறை ,ஆர் குன்னத்தூர், அரியம்பாடி, தச்சூர், மருதாடு, குவளை ,பெருங்குளத்தூர், பாரசூர் ,மேல்சிசி மங்கலம், ஆலத்துறை, ஆலத்தூர், வெங்கட், தவசிமேடு, ஆக்கூர், எச்சூர், வெம்பாக்கம், வட இலுப்பை, நாட்டேரி, தென்னம்பட்டு, அரியூர், கீழநெல்லி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 11ஆம் தேதி திறக்கப்பட்டது. எனவே விவசாயிகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் அரசின் கொள்முதல் மையத்தை விட நெல்மூட்டைகள் தனியாரிடம்  அதிக விலை போவதால் விவசாயிகள் யாரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது

பொதுவாகவே தற்போது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை அதிகரித்துள்ளது. தங்களால் பொருட்கள் எதுவும் வாங்கமுடியவில்லை, இதற்காக விவசாயிகள் நாங்கள் கடன் வாங்கி விவசாயம் பார்க்கிறோம். அப்படி அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வர வேண்டும் என்றால், வாகனத்தின் மூலம் எடுத்துவர வேண்டியதுள்ளது. ஆனால் தனியார் காரார்கள் தங்களுடைய விவசாய நிலத்திற்கே வந்து எடை வைத்து அதற்கான பணத்தை உடனடியாக தந்து விட்டு செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Embed widget